வடசென்னையில், கனமழை வெள்ளத்தால் உயிரிழந்த நிலையில், ஆம்புலன்ஸ் வாகனம் இல்லாததால், அவரது உடல் மீன்பாடி வண்டியில் எடுத்துச் செல்லப்படும் அவலம் நிலவுகிறது.
மேற்கு தாம்பரம் அருகே சிடிஓ காலனியில் இன்னும், மழை நீர் வடியாததால், தவியாய் தவிக்கும் மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் பாதுகாப்பான இடங்களை தேடி வெளியேறி வருகின்றனர்.
சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் கவுன்சிலர்கள், அதிகாரிகள் என யாரை தொடர்புகொண்டாலும் போனை எடுப்பதில்லை எனவும், தங்களுக்கு உதவ அவர்கள் வரவில்லை எனவும் புகார் அளிக்கின்றனர்.
தாம்பரம் - முடிச்சூர் ஆகிய பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியிருக்கும் காட்சிகளை டிரோன் வீடியோ மேல் படம் பிடித்த காட்சி... கடல் போல் மாறிய சாலைகள்!
Chennai Floods: 'மிக்ஜாம்' புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் சேதங்களை சரிசெய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்கிடக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.