தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஏப்ரல் 21 முதல் தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் ஜூன் 1 முதல் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது. 


மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முதல் நாளன்றே இலவச பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட உள்ளன.


9, 10-ம் வகுப்புகளுக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும் சீருடைகள் மாற்றப்பட்டிருப்பதால் அந்த வகுப்புகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் புதிய சீருடையில் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.