224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த வாரம் தேர்தல் நடைபெற உள்ளதால், அனல் பறக்கும் பிரசாரத்தால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது.


ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முதல்வர் தலமையிலான காங்கிரஸ் கட்சியும், அவர்களிடன் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜக-வும் பனிப்போர் நடத்தி வருகின்றன. அதே வேலையில் தேர்தலில் வெற்றிப் பெற அறிவிக்கப்பட இருக்கும் வேட்பாளர்களும் தங்கள் தரப்பிற்கு மக்கள் மனதில் இடம்பிடிக்க பல விஷயங்களை செய்து வருகின்றனர்.


எனவே, ஆளும் காங்., பா.ஜ. இடையே கடும் போட்டி நிலவுகிறது. கருத்து கணிப்பு முடிவுகள் வெவ்றோக வந்தாலும், தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர் அமித்ஷா...!!


ஹிந்துகளுக்கு எதிராகவே செயல் பட்டு வரும் காங்கிரஸ், ஹிந்து பயங்கரவாதம் என கூறிய கருத்துக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 


மேலும், கர்நாடக தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மக்களவை தேர்தலிலும் பாரதிய ஜனதா பெரும்பாண்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார்.