7th Pay Commission, DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்து சில மாதங்களாக பலவித நல்ல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது மீண்டும் ஒரு நல்ல செய்திக்காக ஊழியர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அகவிலைப்படி அதிகரிப்பு குறித்த அறிவிப்பை அரசாங்கம் இந்த மாதம் வெளியிடும் என்று கூறப்படுகின்றது. இந்த முறை அகவிலைப்படியில் நான்கு சதவீத அதிகரிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஊழியர்களுக்கு வரவுள்ள முக்கிய அறிவிப்புகள் என்ன? இவற்றால் ஊழியர்களுக்கு என்ன நிவாரணம் கிடைக்கும்? இவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) 46% அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். இதில் நான்கு சதவீத அதிகரிப்பு ஏற்பட்டால், ஊழியர்களின் மொத்த அகவிலைப்படியும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) அகவிலை நிவாரணமும் (Dearness Relief) 50 சதவீதமாக அதிகரிக்கும். 


அலவன்சுகளில் ஏற்றம்


இந்த முறை அகவிலைப்படி அதிகரிப்பதில் ஒரு வித்தியாசம் உள்ளது. ஏழாவது ஊதியக்குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின் கீழ் அகவிலைப்படி 50% -ஐ எட்டும் பொழுது வீட்டு வாடகை கொடுப்பவு (House Rent Allowance), கல்விக்கான கொடுப்பனவு (Education Allowance), பயணக் கொடுப்பனவு (Travel Allowance) போன்ற கொடுப்பனவுகளையும் அதிகரிக்க வேண்டும். ஆகையால் இந்த முறை அகவிலைப்படி அதிகரிப்புக்குப் பிறகு ஊழியர்களின் மொத்த சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


மேலும் படிக்க | சுகன்யா சம்ரிதி யோஜனா.. அதிக வட்டி பெறுவது எப்படி, உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்


டி ஏ அரியரும் கிடைக்கும்


பொதுவாக அகவிலைப்படி (Dearness Allowance) ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தப்படுகிறது. அந்த வகையில் மார்ச் மாதம் டிஏ அதிகரிப்பு அறிவிக்கப்பட்டால் ஜனவரி மாதம் முதலான டிஏ அரியர் தொகையும் (DA Arrears) ஊழியர்களுக்கு கிடைக்கும். மார்ச் 20 ஆம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் டிஏ ஹைக் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகின்றது. மார்ச் மாதம் இந்த அறிவிப்பு வெளியானால் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்திற்கான அரியர் தொகையும் ஊதியத்துடன் சேர்ந்து வழங்கப்படும். இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும்.


அகவிலைப்படி எவ்வாறு கணக்கிடப்படுகின்றது?


மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் கணக்கிடப்படுகின்றது. தொழிலாளர் அமைச்சகத்தின் ஒரு அங்கமாக இருக்கும் தொழிலாளர் பணியகத்தால் CPI-IW தரவு வெளியிடப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி அதிகரிப்பு அறிவிப்பு அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. அப்போதும் அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டது. தற்போது 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி அதிகரிப்பிற்கான அறிவிப்பு மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


அகவிலைப்படி எதற்காக வழங்கப்படுகின்றது?


பணவீக்கம், அன்றாடம் அதிகரிக்கும் விலைவாசி ஆகியவற்றை ஈடு செய்ய அரசாங்க ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகின்றது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இது திருத்தப்படுகின்றது. ஊழியர்களை போலவே ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலை நிவாரணம் கிடைக்கின்றது. இது அவர்களது ஓய்வுகாலத்தில் மிகப்பெரிய உதவியாக இருக்கின்றது.


மேலும் படிக்க | கிரெடிட் கார்ட் விதிகளில் முக்கிய மாற்றம்: சுற்றறிக்கை வெளியிட்ட RBI


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ