7th Pay Commission: நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியரா? உங்கள் குடும்பத்தில் யாரேனும் மத்திய பணிகளிலோ அல்லது ஒய்வுதியதாரர்களாகவோ இருக்கிறார்களா? அப்படியென்றால், இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். மத்திய அரசு ஊழியர்கள் மிக விரைவில் சில நல்ல செய்திகளை பெறவுள்ளனர். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி (Dearness Allowance) நிலுவைத் தொகையைப் பற்றிய விவாதங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. கொரோனா தொற்றின்போது உருவான அசாதாரண சூழலை சமாளிக்க, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி 1, 2020 முதல் ஜூன் 30, 2021 வரையிலான அகவிலைப்படி முடக்கப்பட்டது, அப்போது 17% அகவிலைப்படி மட்டுமே வழங்கப்பட்டது. முடக்கப்பட்ட தொகையை கொரோனா பாதிப்புகளை சமாளிக்கும் பணிகளில் பயன்படுத்த அரசு முடிவு செய்தது.


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?


கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட டிஏ அரியர் (DA Arrears) தொகையை மீண்டும் அளிக்க வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) மற்றும் ஓய்வூதியதாரர்கள் (Pensioners) தொடர்ந்து அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக அவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். அகவிலைப்படியை நிறுத்த அரசுக்கு உரிமை இல்லை என்றும், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் DA நிலுவைத் தொகையைப் பெற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.


ஊழியர் சங்க அமைப்புகளின் கோரிக்கை


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், ஊழியர் அமைப்புகள் பலமுறை அரசாங்கத்திடம் டிஏ நிலுவைத்தொகையை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன. தற்போது நாட்டின் பொருளாதார நிலை மேம்பட்டுள்ளதால், அகவிலைப்படி அரியர் தொகையை அரசாங்கம் வழங்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக உள்ளது. 18 மாத டிஏ அரியர் (18 Month Arrear) தொகையை முழுமையாக வழங்காவிட்டாலும், இதை தவணைகளாகவாவது வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு, ஊழியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. 


மேலும் படிக்க | வருமான வரி சுற்றறிக்கை: TDS/TCS குறித்து வந்த முக்கிய அறிவிப்பு


எனினும் டிஏ அரியர் தொகையை (DA Arrear Amount) வழங்குவது பற்றி இன்னும் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.


ஃபிட்மென்ட் பேக்டர்


டிஏ அரியர் தவிர ஊழியர்கள் சார்பில் மற்றொரு கோரிக்கையும் உள்ளது. ஃபிட்மென்ட் பேக்டரை (Fitment Factor) அதிகரிக்க வேண்டும் என்று ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்போது மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. இதை 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என ஊழியர் சங்கங்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது நடந்தால், அடிப்படை சம்பளம் ரூ.18,000 -இல் இருந்து ரூ.21,000 ஆக உயரும். இது ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய அதிகரிப்பை கொண்டு வரும். 


(பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி அரியர் தொகைக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.)


மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி: OPS -க்கு நிகராக புதுப்பிக்கப்படும் NPS, ஓய்வூதிய உத்தரவாதம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ