புதுடெல்லி: ஊழியர் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) தொடர்பாக அரசாங்கம் தனது ஆத்மனிர்பர் பாரத் தொகுப்பின் கீழ் சம்பளம் பெறும் வகுப்பினருக்கு ஒரு பெரிய நிவாரணத்தை அறிவித்தது. 
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவி எல்லாத் துறையினருக்கும் பெரும் நட்டத்தை ஏற்படுத்திய நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறுவனங்களின் மாதாந்திர பங்களிப்பை முந்தைய 24 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான ஊழியர்களின் பங்களிப்பு 10 சதவீதமாக இருக்கும் என்று சீதாராமன் கூறியிருந்தார். நேற்றுடன் அந்த காலக்கெடு முடிவடைவதால், ஊழியர்களின் கையில் கிடைக்கும் சம்பளம், ஆகஸ்ட் மாதத்திலிருந்து குறையும் வாய்ப்புள்ளது.


ஆகஸ்ட் 1 முதல் பிஎஃப் பங்களிப்புக்கு 12 சதவீதம் கழித்தல்: ஆகஸ்ட் 1 முதல் வழக்கமான PF பிடித்தம் செய்யப்படும் விதிகள் பொருந்தும், அதாவது EPF மீதான பங்களிப்பு 24 சதவீதமாக மாறும். ஊழியர்களின் பங்களிப்பு 12 சதவீதமாகவும், அதற்கு சமமான பங்களிப்பை நிறுவனங்களும்  வழங்கும். இதனால் பணியாளர்களின் கைக்கு வந்து சேரும் சம்பளத் தொகையில் ஓரளவிற்கு குறையும்.


Read Also | வருமான வரி இன்னும் தாக்க செய்யவில்லையா? கவலை வேண்டாம்: விவரம் உள்ளே!!


24 சதவீத பங்களிப்புக்கு என்ன ஆகும்?


ஊழியர் மற்றும் நிறுவனம் அல்லது முதலாளி கொடுக்கும் சேமநல நிதிக் கணக்கின் 12 சதவீத பங்களிப்புகளில் தலா 3.67 சதவீதம் EPF கணக்கிற்கு செல்லும் நோக்கி செல்கின்றன, மீதமுள்ள 8.33 சதவீதம் Employees’ Pension Fundக்கு செல்லும்.   


கொரோனா காலகட்டத்தில் 15,000 ரூபாய்க்கும் குறைவான சம்பளம் பெறும் ஊழியர்களின் EPF க்கு அரசாங்கம் பங்களிப்பு கொடுக்கிறது. இந்த தொகை ஆகஸ்ட் வரை ஆரசால் வழங்கப்படும்.  


EPFO இல் பதிவுசெய்யப்பட்ட 72.22 லட்சம் ஊழியர்களுக்கு இதனால் பலன் கிடைத்தது. அரசாங்க மதிப்பீடுகளின்படி, சுமார் 72.22 லட்சம் ஊழியர்களும் 3.67 லட்சம் நிறுவனங்களும் இந்த முடிவால் பயனடைந்துள்ளன. இதற்காக இந்திய அரசு சுமார் 2500 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.


பணியாளர் வருங்கால வைப்பு நிதி, பொதுவாக பி.எஃப் (வருங்கால வைப்பு நிதி) என அழைக்கப்படுகிறது, இது ஓய்வூதிய சலுகைகள் திட்டமாகும், இது அனைத்து சம்பள ஊழியர்களுக்கும் கிடைக்கும். பணியாளர் வருங்கால வைப்பு நிதி என்பது சிறந்த சேமிப்பு முறைகளில் ஒன்றாகும். ஒவ்வொரு மாதமும் பணியாளர்கள் தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை சேமிக்கவும், ஓய்வுக்குப் பிறகு அதைப் பயன்படுத்தவும் உதவுகிறது..  


EPF திட்டத்தின் முக்கிய அம்சம் அதன் நிலையான மாத பங்களிப்பாகும். முதலாளிகள் மற்றும் பணியாளர்கள் செய்யும் வழக்கமான மாத முதலீடுகளால் இந்த நிதி உருவாகிறது. சில நிறுவனங்களில், பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிப்பதைத் தவிர்ப்பதற்கு ஊழியர்களுக்கு ஒரு விருப்பம் வழங்கப்படுகிறது, இருப்பினும் முதலாளியின் பங்களிப்பு கட்டாயமாகும்.. ஆனால், பணியில் இருந்து ஓய்வு பெறும்போது, இந்த மாதாந்திர பங்களிப்பானது பணியளர்களுக்கு கணிசமான தொகையைக் கொடுக்கிறது..