7வது சம்பள கமிஷன், சமீபத்திய அப்டேட்: மத்திய அரசு ஊழியர்கள் தற்போது ஜூலை 2023 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பிற்காக காத்திருக்கிறார்கள். இது அறிவிக்கப்பட்டவுடன் ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம் இருக்கும். இதனுடன் ஜூலை மாதம் முதலான அகவிலைப்படி அதிகரிப்பு அரியர் தொகையும் ஊழியர்களுக்கு வழங்கப்படும். இதற்கிடையில் அவர்களுக்கு மற்றொரு நல்ல செய்தி கிடைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிப்பு


2016 -இல் மத்திய ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டது. அதே ஆண்டில், மத்திய ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழு (7th Pay Commission) அமலுக்கு வந்தது. 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்துவதற்கு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அமல்படுத்தப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை 6000 ரூபாயில் இருந்து 18000 ரூபாயாக ஃபிட்மெண்ட் ஃபாக்டர் நேரடியாக உயர்த்தியது.


ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அடிப்படை சம்பளத்தின் 2.57 மடங்கு ஆகும். ஆனால், இதை 3 மடங்குக்கு மேல் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஊழியர்கள் நீண்ட நாட்களாக முன்வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால் இது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஃபிட்மெண்ட் ஃபாக்டரை மூன்று மடங்காக உயர்த்தினால், மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 26,000 ரூபாய்க்கு மேல் உயரும். 


அடிப்படை சம்பளத்தில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 


CG ஊழியர்களின் சம்பளத்தை தீர்மானிப்பதில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, மத்திய அரசு ஊழியர்களின் மொத்த சம்பளம், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மற்றும் அடிப்படை சம்பளம் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது, மத்திய ஊழியர்களின் சம்பள உயர்வு இரண்டரை மடங்காக கணக்கிடப்படுகிறது.


மேலும் படிக்க | ரயில்வே வழங்கிய மாஸ் செய்தி.. மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.. உடனே படிக்கவும்


ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் பங்கு என்ன?


7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி,ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆகும். மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அகவிலைப்படி (DA), பயணப்படி (TA) மற்றும் வீட்டு வாழ்க்கை கொடுப்பனவு (HRA) ஆகியவற்றை ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆல் பெருக்கி கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 எனில், அலவன்ஸ்கள் தவிர்த்து அவரது சம்பளம் ரூ.46,260 ஆக இருக்கும், அதாவது 18,000 X 2.57. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3 ஆக இருந்தால் அது நிச்சயம் சம்பளத்தில் ஒரு பெரிய உயர்வைக் கொண்டு வரும். இதனால்தான் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 


அகவிலைப்படி கணக்கீடு


மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் DA, TA மற்றும் HRA ஆகியவை சேர்க்கப்படுகின்றன. பணவீக்கத்திலிருந்து பாதுகாக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஆண்டுக்கு இரு முறை திருத்தம் செய்யப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இது திருத்தப்படுகின்றது. ஜனவரிக்கான அதிகரிப்பு அதற்கு முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ தரவுகளின் அடிப்படையிலும், ஜூலை அகவிலைப்படி உயர்வு ஜனவரி முதல் ஜூன் மாதங்களுக்கான ஏஐசிபி தரவுகளின் அடிப்படையிலும் முடிவு செய்யப்படுகின்றன.


டிஏ உயர்வு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?


தொழிலாளர் பணியகம் ஒவ்வொரு மாதமும் வெளியிடும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலை நிவாரணம் ஆகியவை நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த தொழிலாளர் பணியகம் தொழிலாளர் அமைச்சகத்தின் ஒரு பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | கடனை கொடுத்த பின்பும் வீட்டு பத்திரங்கள் கிடைக்கவில்லையா? ரிசர்வ் வங்கி புதிய ரூல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ