Banana Powder Manufacturing Business: இன்றைய காலகட்டத்தில் பலருக்கு, தொழில் செய்யும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பிறரை சேராமல், நாலு பேருக்கு வேலை கொடுக்கும் நிலையில் இருக்க வேண்டும் என்ற ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் தற்போது அதிகமாக உள்ளது. மத்திய அரசும் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், முத்ரா திட்டங்கள் போன்ற பல கடன் திட்டங்கள் மூலம் எளிதாக கடன் உதவியும் வழங்கி வருகிறது. அந்த வகையில் வாழைப்பொடி தயாரிக்கும் தொழில் (Business Idea), உங்களுக்கு பெரிய அளவில் லாபத்தை கொடுக்கும் தொழிலாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாழையில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். வாழைக்காய் பல வித நோய்களுக்கு தீர்வாக அமைகிறது. இந்நிலையில், நீரிழு, பிபி போன்ற நோய்களை கட்டுபடுத்தவும், ஆரோக்கிய நன்மைகளுக்காகவும், இதனை பயன்படுத்துபவர்கள் அதிகள் உள்ளனர். இந்த தொழிலை திடங்குவது மிகவும் நன்மை பயக்கும்.


நீங்கள் ஒரு தொழிலைத் தொடங்க விரும்பினால், இன்று நாங்கள் உங்களுக்கு கொண்டு வந்துள்ள வாழைபொடி தயாரிப்பு என்னும் சூப்பர்ஹிட் வணிக யோசனை உங்களுக்கு கை கொடுக்கும். இதை ஆரம்பித்தவுடனேயே பெரிய அளவில் சம்பாதிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். செலவும் மிகவும் குறைவு. இதுதான் வாழைபொடி வியாபாரம். இதுபோன்ற சூழ்நிலையில் வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள், அதனுடன் வாழைத் பொடி தயாரிக்கும் தொழிலையும் தொடங்கலாம். இது உங்கள் வருமானத்தை அதிகரிக்கும். வாழைத்தூள் தயாரிக்கும் தொழிலைத் தொடங்க, முதலில் 10,000 - 15,000 ரூபாய் தேவைப்படும்.


வாழைப்பொடி தயாரிக்க இரண்டு இயந்திரங்கள் (Business Idea) தேவைப்படும். முதலில் உங்களுக்கு வாழைப்பழத்தை உலர்த்தி இயந்திரம் மற்றும் இரண்டாவது கலவை இயந்திரம் தேவைப்படும். www.indiamart.com இணையதளத்தில் இந்த இயந்திரங்களை ஆன்லைனில் வாங்கலாம் என கூறப்படுகிறது. நீங்கள் விரும்பினால், உங்கள் அருகிலுள்ள சந்தையில் இருந்து இயந்திரத்தை ஆஃப்லைனிலும் வாங்கலாம்.


வாழைப் பொடி செய்வது எப்படி


முதலில் வாழை காய்களை சோடியம் ஹைபோகுளோரைட் கரைசலில் சுத்தம் செய்யவும். பிறகு கையால் தோலுரித்து உடனே சிட்ரிக் அமிலக் கரைசலில் 5 நிமிடம் முக்கி எடுக்கவும். அதன் பிறகு, வாழைகளை சிறிய துண்டுகளாக வெட்டவும். வாழைத் துண்டுகள் 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 24 மணி நேரம் உலர வைக்கப்படும். அதனால் வாழை துண்டுகள் முற்றிலும் காய்ந்துவிடும். அதன் பிறகு, இந்த துண்டுகளை இயந்திரத்தில் போட்டு நைசாக அரைக்கவும். நன்றாக தூள் வரும் வரை அரைக்கவும்.


மேலும் படிக்க | பெண்கள் அதிக லாபம் பார்க்கும் தொழில்கள்! ‘இதை’ செய்தால் நீங்களும் ஆகலாம் Boss Lady!


வாழைக்காய் பொடி மூலம் கிடைக்கும் வருவாய்


வாழையிலிருந்து தயாரிக்கப்படும் பொடி,  வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். தயாரிக்கப்பட்ட பொடியை ஒரு பாலிதீன் பையில் அல்லது கண்ணாடி பாட்டிலில் அடைத்து விற்கலாம். வாழை பொடி தயாரிக்க ஆகும் செலவு மிகவும் குறைவு. சந்தையில் ஒரு கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்கப்படுகிறது. அதாவது தினமும் 5 கிலோ வாழைத் பொடி தயாரித்தால் தினமும் 3500 முதல் 4500 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.


வாழைக்காய் ஆரோக்கிய நன்மைகள்


வாழைப் பொடி பிபியை கட்டுப்படுத்த உதவுகிறது. வாழைத்தூள் குழந்தைகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஜீரண சக்தியை வலுப்படுத்த வாழைப்பழ பொடி நன்மை பயக்கும். இது சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.


மேலும் படிக்க |  சீக்கிரம் கோடீஸ்வரர் ஆக ஆசையா? அப்போ ‘இந்த’ தொழிலை செய்து பாருங்கள்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ