புது டெல்லி: பிஎஸ் -4 வாகனங்கள் ஏப்ரல் 1 முதல் பதிவு செய்யப்படாது. இது தொடர்பாக மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அடுத்து, பிஎஸ்-4 வாகனங்களை விற்பனை செய்வதற்கு 10 நாள் நீட்டிப்பு காலம் இருந்தபோதிலும், இது தொடர்பாக அரசாங்கத்தால் எந்த ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், பிஎஸ் -4 வாகனங்களை 2020 மார்ச் 31 வரை விற்க மத்திய அரசாங்கம் அனுமதி அளித்து. 2020 ஏப்ரல் 1 முதல் பிஎஸ் -6 தரமான வாகனங்களை மட்டுமே பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தது.


மத்திய அரசு பிறப்பித்த தனது ஆணையில், மார்ச் 27 ம் தேதி உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது. 


 



சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளின்படி, எந்தவொரு கார் அல்லது பைக் உற்பத்தியாளர் அல்லது வியாபாரி பிஎஸ் -4 வாகனங்களை 2020 ஏப்ரல் 1 அல்லது அதற்குப் பிறகு விற்கவோ பதிவு செய்யவோ முடியாது. அனைத்து பிஎஸ் -4 வாகனங்களும் 2020 மார்ச் 31 க்குள் பதிவு செய்துக்கொள்ளலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


பிஎஸ் -4 வாகனங்களை பதிவு செய்வது குறித்து வியாபாரிகளுக்கும் நீதிமன்றம் சிறிது நிவாரணம் அளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக மத்திய அரசாங்கத்தால் எந்த அறிவுறுத்தலும் வெளியிடப்படவில்லை. எனவே இப்போது வாகன உற்பத்தியாளர் அல்லது வியாபாரி பிஎஸ் -4 வாகனங்களை ஏப்ரல் 1 முதல் விற்க முடியாது.