நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (NPS) என்பது ஓய்வூதிய காலத்திற்கான பணத்தை சேமிக்க வைக்க ஏதுவாக மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள திட்டம். ஓய்வூதிய காலத்திற்கான ஒரு பாதுகாப்பான திட்டமாக மட்டுமல்லாமல், பணத்தை சேமிக்கும் சிறந்த திட்டமாகவும், கூடுதலாக வரி சலுகைகள் போன்ற பல்வேறு விதமான பலன்களை அளிக்கும் திட்டமாகவும் உள்ளது. NPS கணக்கில் பணத்தை முதலீடு செய்வதன் மூலமாக ஒருவர் ஓய்வூதிய காலத்திற்குப் பிறகும், பிறரை சார்ந்து இருக்காமல் கவுரவமான வாழ்க்கையை வாழலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய விதி 2024 ஏப்ரல் 1ம் தேதி  முதல் அமல்


NPS கணக்கை முன்பை விட பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கில்  PFRDA புதிய விதிகளை 2024  ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது. NPS தொடர்பான விதிகளை மாற்றியுள்ள PFRDA எனப்படும் பென்ஷன் ஃபண்டு ரெகுலேட்டர் அண்ட் டெவலப்மெண்ட் அதாரிட்டி இரண்டு ஃபேக்டர் ஆதண்டிகேஷனை (Two-Factor Authentication) கட்டாயமாக்கியுள்ளது. முன்னதாக, என்பிஎஸ் கணக்கில் லாகின் செய்ய, லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொடுக்க வேண்டும். ஆனால் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இரண்டு அடுக்கு அங்கீகாரம் கொடுத்தால் மட்டுமே உங்களின் கணக்கில் லாகின் செய்ய இயலும்.


என்பிஎஸ் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு, பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு தகவல்கள் மட்டுமில்லாமல் அவர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும் ஓடிபி எண்ணை உள்ளீடு செய்தால் மட்டுமே என்பிஎஸ் கணக்கில் லாகின் செய்ய முடியும் என புதிய விதி கூறுகிறது. பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு இரண்டு அடுக்கு அங்கீகாரம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.


மேலும் படிக்க | EPFO UAN Profile விவரங்களை எத்தனை முறை மாற்ற முடியும்? தேவையான ஆவணங்கள் என்ன?


பாதுகாப்பை அதிகரிக்கும் Two-Factor Authentication


ஏப்ரல் 1 முதல், NPS பயனர்கள் CRA என்னும் ரெக்கார்டு கீப்பிங் ஏஜென்சிகளை அணுக ஆதார் மூலம் உள்நுழைய வேண்டும். இதற்காக, சந்தாதாரர்களின் தற்போதைய ஐடி உள்நுழைவு செயல்முறையுடன் ஒருங்கிணைக்கப்படும். இந்த புதிய லாகின் செயல்முறை, என்பிஎஸ் அமைப்பைப் பாதுகாப்பானதாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று PFRDA நம்புகிறது. இது NPS கட்டமைப்பிற்கான அங்கீகரிக்கப்படாத அணுகலைக் குறைப்பதன் மூலம் பாதுகாப்பு அபாயங்களைக் குறைக்கும்.


புதிய அமைப்பைத் தொடங்குவதற்கு முன், மத்திய ரெக்கார்டு கீப்பிங் ஏஜென்சிகள் (சிஆர்ஏக்கள்) விரிவான நிலையான இயக்க முறை (எஸ்ஓபி) மற்றும் செயல்முறை ஓட்டம் குறித்து அரசின் சம்பந்தப்பட்ட நோடல் அலுவலகங்களுக்குத் தெரிவிக்கும். இந்த மாற்றத்தை நோடல் அதிகாரிகளுக்கு விளக்க பாரிய முயற்சி மேற்கொள்ளப்படும். PFRDA சுற்றறிக்கையின்படி, தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கீழ் உள்ள நோடல் அலுவலகங்கள் NPS பரிவர்த்தனைகளுக்கு கடவுச்சொல் அடிப்படையிலான உள்நுழைவைப் பயன்படுத்துகின்றன.


ஆதார் மூலம் உள்நுழைவு அங்கீகாரத்துடன், அரசு அலுவலகங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் அனைத்து NPS செயல்பாடுகளும் பாதுகாப்பான சூழலில் செய்யப்படும் என்று PFRDA நம்புகிறது. பயனர் தொடர்ந்து ஐந்து முறை தவறான கடவுச்சொல்லை உள்ளிட்டால், அவரது கணக்கு லாக் செய்யப்படும். பின்னர் கணக்கை அணுக பயனர் தனது கடவுச்சொல்லை மீட்டமைக்க வேண்டும். இதற்காக அவர் ஐ-பின் கோர வேண்டும் அல்லது ரகசிய கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ஹோலி பண்டிகைக்கு ஜாக்பாட்.. இலவசமாகப் பெறலாம் எல்பிஜி சிலிண்டர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ