EPFO Withdrawal Rules: PF உறுப்பினரா நீங்கள்? உங்கள் சம்பளத்தில் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை பிஎஃப் கணக்கில் செல்கிறதா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். ஊழியர்களின் ஊதியத்தில் ஒவ்வொரு மாதமும் 12% இபிஎஃப் கணக்கில் (EPF Amount) டெபாசிட் செய்யப்படுகின்றது. அதே அளவு தொகையை நிறுவனமும் ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) டெபாசிட் செய்யும் முழு தொகையும் இபிஎஃப் கணக்கில் செல்கிறது. எனினும், நிறுவனம் டெபாசிட் செய்யும் தொகையில் ஒரு பகுதி இபிஎஃப் கணக்கிற்கும், ஒரு பகுதி EPS கணக்கிற்கும் செல்கின்றன. EPFO ​​இல் டெபாசிட் செய்யப்பட்ட தொகை பணி ஓய்வுக்குப் பிறகு முதிர்ச்சியடையும். எனினும், சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், அவசர தேவைகளின் போது இபிஎஃப் தொகையை (EPF Amount) எடுக்க EPFO அனுமதிக்கின்றது. 


எனினும், பகுதியளவு தொகையை எடுப்பதற்கு சில வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன. நீங்களும் EPF கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படியென்றால், சில விதிமுறைகளை மனதில் கொள்வது நல்லது. சமீபத்தில் EPFO பகுதியளவு தொகையை எடுப்பதற்கான விதிகளில் திருத்தம் செய்துள்ளது. அவற்றை பற்றிய விவரங்களை இங்கே காணலாம். 


New EPFO Withdrawal Rules: EPF கணக்கிலிருந்து பகுதியளவு தொகையை எடுப்பதற்கான புதிய விதிகள்


- EPF கணக்கிலிருந்து பகுதியளவு தொகையை திரும்பப் பெறுவதற்கு, இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- கல்வி, வீடு வாங்குதல் அல்லது கட்டுதல், திருமணம், நோய் சிகிச்சை ஆகியவை தொடர்பான தேவைகளுக்கு மட்டுமே பகுதியளவு தொகையை எடுக்க முடியும்.
- EPFO வித்ட்ராயல் விதிகளின்படி, EPF கணக்கு வைத்திருப்பவர்கள் ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு மொத்த தொகையில் 90 சதவிகிதம் வரை எடுக்கலாம்.
- 90 சதவிகித தொகையை எடுக்க உறுப்பினர் வயது 54 வயதிற்கு மேல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | அம்மாடி... 92% ஊதிய உயர்வு கிடைக்குமா!! மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழு, லேட்டஸ்ட் அப்டேட்


இன்றைய காலகட்டத்தில், பல நிறுவனங்களில் அவ்வப்போது ஆட்குறைப்பு செய்கிறார்கள். இப்படிப்பட்ட நேரங்களில், சம்பளம் வராமல் பண தட்டுப்பாடு ஏற்படுகின்றது. இந்த நேரத்தில் பணத்தை எடுக்க இபிஎஃப்ஓ அனுமதிக்கின்றது. இந்த சூழலில் பிஎஃப் பணத்தை எடுப்பதற்கான விதிகளை பற்றி இங்கே காணலாம்.


- EPFO ​​விதிகளின்படி, பணிநீக்கம் ஏற்பட்டு, பணி ஓய்வுக்கு முன்னரே பணியாளர் வேலையில்லாமல் இருந்தால், அவர் EPF நிதியில் இருந்து பணத்தை எடுக்கலாம். 
-ஒரு மாதம் வரை வேலை இல்லாமல் இருந்தால், ஊழியர் 75 சதவீத தொகையை எடுக்கலாம்.
- தொடர்ந்து இரண்டு மாதங்கள் வேலையில்லாமல் இருந்தால், முழு தொகையையும் திரும்பப் பெறலாம்
- புதிய வேலை கிடைத்த பிறகு, ஊழியர் மீதமுள்ள 25 சதவீத நிதியை புதிய EPF கணக்கிற்கு மாற்றலாம்.


வரி சலுகைகள்


- ஒரு ஊழியர் தொடர்ந்து 5 ஆண்டுகள் EPF-க்கு பங்களித்திருந்தால், பணத்தை எடுக்கும் நேரத்தில் அவருக்கு வரிச் சலுகையும் கிடைக்கும். 
- முதிர்வுக்கு முன் திரும்பப் பெறும்போது டிடிஎஸ் கழிக்கப்படும்.
- பிஎஃப் கணக்கிலிருந்து எடுக்கப்படும் முழுத் தொகையும் 50,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால், TDS கழிக்கப்படாது.
- உறுப்பினர் பகுதியளவு தொகையை எடுக்க PAN கார்டைச் சமர்ப்பித்தால், 10 சதவிகிதம் TDS விலக்கு கிடைக்கும்.
- பான் கார்டு சமர்ப்பிக்கப்படாவிட்டால், 30 சதவிகித TDS கழிக்கப்படும்.


பகுதியளவு தொகையை எடுக்க எப்படி விண்ணப்பிப்பது?


பகுதியளவு தொகையை எடுக்க EPF உறுப்பினர் இபிஎஃப்ஓ போர்ட்டல் (EPFO Portal) மற்றும் உமங் செயலி (Umang App) மூலம் விண்ணப்பிக்கலாம். முதலாளி / நிறுவனத்திடம் ஒப்புதல் பெற்ற பிறகு, பணம் உறுப்பினரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். 


மேலும் படிக்க | மிடில் கிளாஸ் மக்களுக்கு வரவுள்ள சூப்பர் செய்தி: VPF -இல் பெரிய மாற்றம், விவரம் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ