புதுடெல்லி: கடன் வாங்கியவர்களின் சொத்து ஆவணங்களை கடனை செலுத்திய 30 நாட்களுக்குள் அவர்களிடம் திருப்பித் தர வேண்டும் என்று கடன் வழங்குபவர்களுக்கு ரிசர்வ் வங்கி கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இல்லையெனில் அபராதம் செலுத்த வேண்டும். வங்கிகளில் கடன் வாங்கியுள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் கடனை திருப்பி செலுத்திவிட்ட வாடிக்கையாளர்களுக்கான தீர்வாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI, Reserve Bank of Indiaஒரு புதிய வழிகாட்டுதலை அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது வங்கியில் கடன் வாங்கியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வங்கிகள், என்பிஎஃப்சி (NBFC) -கள், ஹோம் பைனான்ஸ் அமைப்புகள், ஏஆர்சி (ARC) மற்றும் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து நிதி சேவை அமைப்புகளுக்குமான அறிவுறுத்தல் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்


கடனாளிகளின் நலன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதன்கிழமை ஒரு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. மொத்த கடன் தொகையையும் திருப்பிச் செலுத்திய பிறகு, 30 நாட்களுக்குள், அசையும் அல்லது அசையா சொத்து தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் கடனாளியிடம் திருப்பித் தருமாறும், அதன் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டணங்களை நீக்குமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.


5,000 அபராதம் செலுத்த வேண்டும்
வழிகாட்டுதல்களைப் பின்பற்றவில்லை என்றால், அதன் வரம்புக்கு உட்பட்ட யூனிட்கள் (RE) ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் இழப்பீடு செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அத்தகைய அசையும் அல்லது சொத்து ஆவணங்களை வழங்குவதில் நிதி நிறுவனங்கள் வெவ்வேறு அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பதாக மத்திய வங்கி கூறியது, இதனால் வாடிக்கையாளர்களுக்கு பண விரயமும், மன உளைச்சலும் அதிகரிக்கிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  


மேலும் படிக்க | கடன் வாங்கியவர்களுக்கு நல்ல செய்தி: வங்கிகளுக்கு RBI வைத்த செக்


கடன் செலுத்திய 30 நாட்களுக்குள் ஆவணங்களைத் திருப்பித் தரவும்
ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. சரியான நடத்தை விதிகளை பராமரிக்கவும், விஷயங்களை சீரானதாகவும் மாற்ற, வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் அதன் கீழ் உள்ள அசையும் அல்லது அசையா சொத்து தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் 30 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.  கடன் தொகையை திருப்பி செலுத்திய பிறகு, எத்தனை நாட்களுக்குள் பத்திரங்களை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற விவரமும் கடன் ஆவணங்களில் குறிப்பிடப்படவேண்டும்.


முழு கடன் தொகையையும் திருப்பி செலுத்திய பிறகு ஆவணங்களை கொடுப்பதற்கு தாமதம் செய்தால் (loan repayment closure), கடன் வழங்கிய நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். 


தாமதம் ஏற்பட்டால் தெரிவிக்க வேண்டும்
ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், அதற்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்டவருக்கு நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


ரிசர்வ் வங்கி, அதன் எல்லைக்கு உட்பட்ட அனைத்து வங்கிகளுக்கு வழங்கிய அறிவுறுத்தலில், கடனாளி தனது விருப்பப்படி, கடன் கணக்கு இயக்கப்படும் வங்கிக் கிளையில் இருந்து அசல் அசையும்/அசையா சொத்து ஆவணங்களை சேகரிக்க விருப்பம் அளிக்கப்படும் என்று கூறியுள்ளது. அல்லது ஆவணங்கள் கிடைக்கும் சம்பந்தப்பட்ட பிரிவின் வேறு ஏதேனும் அலுவலகத்திலிருந்து. அசையும்/அசையா சொத்தின் அசல் ஆவணங்களைத் திருப்பித் தருவதற்கான காலக்கெடு மற்றும் இடம் ஆகியவை கடன் அனுமதிக் கடிதங்களில் குறிப்பிடப்படும்.


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு என்ஜாய்மெண்ட்.. ரயில்வே தந்த ஜாக்பாட் நியூஸ்


வங்கிகள் இணையதளத்தில் தகவல்களை அளிக்க வேண்டும்
கடன் வாங்கியவர் அல்லது கூட்டுக் கடன் வாங்கியவர் மரணம் அடைந்தால், சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு அசையும்/அசையா சொத்துக்களின் அசல் ஆவணங்களைத் திருப்பித் தருவதற்கு நிதி நிறுவனங்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட செயல்முறையை வைத்திருக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இது போன்ற செயல்முறைகள், இதே போன்ற கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுடன் வாடிக்கையாளர்களுக்குத் தகவலுக்காக இணையதளத்தில் பதிவிடப்பட வேண்டும்.


ஒருவரின் மரணத்திற்குப் பிறகு கடன் தொகையை அவரது வாரிசுதாரர்கள் திருப்பிச் செலுதிய பிறகு, அசல் ஆவணங்களையும், பத்திரங்களையும் திருப்பிக் கொடுக்கும் நடைமுறைக்கும் இந்த காலக்கெடு பொருந்தும். 


அசையும்/அசையா சொத்துக்களின் அசல் ஆவணங்கள் இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் கடன் வாங்குபவருக்கு அத்தகைய ஆவணங்களின் நகல்கள்/சான்றளிக்கப்பட்ட நகல்களைப் பெற உதவுவதோடு, அதற்கான செலவையும் இழப்பீட்டுத் தொகையுடன் கடன் வழங்கிய நிறுவனங்கள் ஏற்க வேண்டும்.


60 நாட்களுக்குப் பிறகு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், செயல்முறையை முடிக்கவும் இழப்பீட்டைக் கணக்கிடவும் வங்கிக்கு 30 நாட்கள் கூடுதல் நேரம் கிடைக்கும். அதாவது மொத்தம் 60 நாட்களுக்குப் பிறகு இழப்பீடு வழங்க வேண்டியிருக்கும். டிசம்பர் 1, 2023 அன்று அல்லது அதற்குப் பிறகு அசல் அசையும்/அசையா சொத்து ஆவணங்கள் வழங்கப்பட வேண்டிய அனைத்து வழக்குகளுக்கும் இந்த அறிவுறுத்தல்கள் பொருந்தும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | புதிய பாஸ்போர்ட் எடுக்கும் விதிகளில் மாற்றம்: இனி எளிதாக பெற்றுக்கொள்ளலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ