கூட்டு வீட்டுக் கடன்: வீடு வாங்குவது என்பது அனைவருக்கும் வாழ்நாள் முதலீடு போன்றது. இது ஒரு பெரிய நிதி ரீதியான முடிவாக கருதப்படுகிறது. பெரும்பாலான மக்கள் வீட்டுக் கடனின் உதவியுடன் கனவு வீட்டை வாங்குகிறார்கள். வீடு வாங்கும் போது அளவு மற்றும் இடம் மிகவும் முக்கியம். வீட்டின் விலையும் இதைப் பொறுத்து இருக்கும். பொதுவாக 80-90 சதவீதம் வரை நிதியுதவி செய்யப்படுகிறது. இந்த கடன் 2-3 தசாப்தங்களுக்கு நீடிக்கும். அத்தகைய சூழ்நிலையில், வட்டி விகிதம் மிகவும் முக்கியமானது. இந்த சந்தர்ப்பங்களில் விட்டு கடன் வாங்குபவர்களுக்கு கூட்டு வீட்டுக் கடன் ஒரு நல்ல வழியாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கூட்டு வீட்டுக் கடனின் முக்கிய நன்மைகள்


கோத்ரேஜ் கேபிட்டலின் தலைமை வாடிக்கையாளர் அதிகாரி நளின் ஜெயின் கூறுகையில், 'கூட்டு வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்குவதில் பல நன்மைகள் உள்ளன. உங்கள் மனைவியை இணை விண்ணப்பதாரராக அல்லது இணை உரிமையாளராக மாற்றினால், பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக மனைவி வேலையில் இருந்தால், இந்த நன்மை பல வழிகளில் அதிகரிக்கிறது.' என்று கூறினார்.


கூட்டு வீட்டுக் கடனின் 5 நன்மைகள்


1. உங்கள் மனைவி வேலை செய்கிறார் என்றால், அவரை இணை விண்ணப்பதாரராக்கி வீட்டுக் கடன் வாங்கினால், உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். முதலாவதாக, கடன் பெறுவதற்கான தகுதி அதிகரிக்கிறது. வருமான ஆதாரம் அதிகரிப்பதே இதற்குக் காரணம். இருவருடைய CIBIL வலுவாக இருந்தால், வங்கியின் வட்டி விகிதம் மிகவும் குறைவாக இருக்கும்.


மேலும் படிக்க | வீடு வாங்கலையோ வீடு! 40 வருச கடன்! மிகவும் குறைந்த இ.எம்.ஐயில் கடன் தர நாங்க ரெடி 


2. நிதி நிறுவனம் பெண்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்குகிறது. இது தவிர, அதிக மற்றும் நிலையான வருமானம் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த வட்டி விகிதமும் வழங்கப்படுகிறது. பெண் இணை விண்ணப்பதாரர் காரணமாக, இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வட்டி விகிதத்தில் இரட்டை நன்மை கிடைக்கும்.


3. கடன் திட்டத்தில் இணை விண்ணப்பதாரர் குறிப்பிடப்பட்டிருந்தால், கடன் வழங்குபவர்கள் எளிதாக கடன் வழங்குகிறார்கள். உண்மையில், இதில் ஆபத்து வெகுமதி (ரிஸ் ரிவார்ட்) குறைகிறது. ஒற்றை விண்ணப்பதாரராக இருந்தால், வங்கியின் சரிபார்ப்பு மற்றும் செயலாக்க நேரம் சிறிது அதிகமாக இருக்கும்.


4.  இணை விண்ணப்பதாரருடன் உங்கள் மனைவியும் இணை உரிமையாளராக இருந்தால், வரிச் சலுகையும் இரட்டிப்பாகும். வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்தினால், பிரிவு 24ன் கீழ் வட்டியில் ரூ.2 லட்சம் வரிச் சலுகை கிடைக்கும். அசல் தொகையை திருப்பிச் செலுத்தும்போது பிரிவு 80சியின் கீழ் ரூ.1.5 லட்சம் வரிச் சலுகை கிடைக்கும். இதன் மூலம் மொத்த லாபம் 3.5 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். மனைவி இணை உரிமையாளராக இருந்தால், இருவரும் இந்த பலனைப் பெறுவார்கள். மேலும் நிகர வரிச் சலுகை ரூ.7 லட்சமாக இருக்கும்.


5. இணை உரிமையைப் பயன்படுத்த (கோ- ஓனர்ஷிப்), மனைவியும் EMI செலுத்த வேண்டும். மனைவி 50% சொத்துக்கு சொந்தக்காரராக இருந்தால், அவரும் பாதி EMI செலுத்த வேண்டும். வீட்டுக் கடன் கிடைத்து சில வருடங்கள் கழித்து, மனைவி வேலையை விட்டுவிட முடிவு செய்தால், அது குறித்து வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்தும் திறன் குறைகிறது. தகவல் கிடைத்தவுடன் வங்கியின் தரப்பில் இருந்து திருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.


மேலும் படிக்க | நகை வாங்க பிளானா? சவரனுக்கு ரூ 320 குறைவு! இதுதான் தங்கம் வாங்க சரியான நேரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ