வீடு வாங்குபவர்களுக்கான வீட்டுக் கடன் திட்டம்: மத்திய அரசு  (Central Government) தடிபோது மற்றொரு புதிய மற்றும் பெரிய திட்டம் ஒன்றை கொண்டு வரவுள்ளது, இதில் வீடு வாங்குபவர்களுக்கு நிறைய நிவாரணம் கிடைக்கக்கூடும். தற்போது இதுகுறித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், நகரங்களில் சொந்த வீடு வாங்கும் கனவில் இருக்கும் மக்களுக்கு வீட்டுக் கடனுக்கான வட்டியில் நிவாரணம் அளிக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் மாதம் புதிய திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது இந்த திட்டத்தின் நடைமுறைகள் குறித்த பணிகள் நடைபெற்று வருகின்றன:
இந்நிலையில் இந்த புதிய திட்டம் குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, இந்த திட்டத்தின் வழிமுறைகள் இன்னும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசாங்க திட்டத்தின் பலன் என்னவென்றால், நீங்கள் கடனுக்கான வட்டியிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள் என்றார்.


இந்த திட்டம் செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்படும்:
நகரங்களில் வீடு வாங்கும் கனவில் இருப்பவர்களுக்கு கடனுக்கான வட்டியில் நிவாரணம் வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் செயலாளர் மனோஜ் ஜோஷி தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | அரசு ஊழியர்கள் கவனத்திற்கு... குழந்தைகள் கல்வி உதவித்தொகை - இதை மட்டும் செய்ய வேண்டாம்!


நடுத்தர குடும்பங்களுக்கான அறிவிப்பு:
முன்னதாக நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், நகரங்களில் வசிக்கும், சொந்த வீடு இல்லாத நடுத்தரக் குடும்பங்களுக்கு, இனி எளிதாக சொந்த வீடு வாங்கும் திட்டத்தை அறிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் நீங்கள் கடனுக்கான வட்டியிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். இதனுடன், நீங்கள் கடன் தொகையை மட்டுமே செலுத்த வேண்டும் மற்றும் வட்டித் தொகையை செலுத்த வேண்டியதில்லை என்று கூறினார்.


பிரதமர் மோடி தனது உரையில் தகவல் தெரிவித்தார்:
மேலும் செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, நடுத்தரக் குடும்பங்கள் நகரங்களில் சொந்த வீடு வேண்டும் என்று கனவு காண்கின்றனர். வீடுகளுக்கு வெளியே வசிக்கும் நடுத்தர குடும்பங்கள் பெரிதும் பயன்பெறும் வகையில் இதற்கான திட்டத்தை விரைவில் கொண்டு வருவோம் என்று அப்போது தெரிவித்திருந்தார்.


இவர்களுக்கு வட்டி நிவாரணம் வழங்க முடிவு:
அதுமட்டுமின்றி வாடகை வீடுகள், அங்கீகாரமற்ற குடியிருப்புகள், குடிசைப் பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு சொந்த வீடு கட்ட வங்கிக் கடனுக்கான வட்டியில் நிவாரணம் வழங்க முடிவு செய்துள்ளோம் என்று கூறியிருந்தார். இதனால் வரும் நாட்களில் நகரங்களில் சொந்த வீடு வாங்கும் கனவு காணும் மக்களுக்கு வீட்டுக் கடனுக்கான வட்டி நிவாரணம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்றைய பேட்டியில் தெரிவித்துள்ளார், இது நடுத்தர மக்களுக்கு பெரிய லாட்டரியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு ஜாக்பாட், டிஏ ஹைக் புதிய ஃபார்முலா... அட்டகாசமான அப்டேட் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ