7வது ஊதியக் குழு அகவிலைப்படி உயர்வு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central government employees) நல்ல செய்தி. இப்போது ஊழியர்களின் அகவிலைப்படியில் (DA Hike) பெரும் ஏற்றம் ஏற்பட்டுள்ளது, ஆனால் அடுத்த ஆண்டு மட்டுமே மத்திய ஊழியர்களுக்கு இதன் பலன் கிடைக்கும். ஆம்... நீங்களும் சம்பள உயர்வுக்காக (Salary Hike) காத்திருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு விரைவில் மெகா பரிசு கிடைக்கப் போகிறது. ஏனெனில் ஜூலை 2023 முதல் டிசம்பர் 2023 வரையிலான எண்களின் மூலம், அடுத்த ஆண்டு ஜனவரியில் ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கப் போகிறது என்பது முடிவு செய்யப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூலை மாதத்தில் இந்த (AICPI) எண்ணிக்கை 139.7 புள்ளிகளை எட்டியது:
இந்நிலையில் AICPI (அகில இந்திய பொது குறியீடு) இன்டெக்ஸ் ஜூலை 2023க்கான தரவையும் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் 3.3 புள்ளிகள் வேகம் தற்போது காணப்படுகிறது. கடந்த ஜூன் 2023 இல் இந்த எண்ணிக்கை 136.4 புள்ளிகளாக இருந்த நிலையில், தற்போது ஜூலையில் இந்தத் தரவு 139.7 புள்ளிகளை எட்டியுள்ளது.


இந்த எண்ணிக்கை 47.14 சதவீதத்தை எட்டியுள்ளது:
எங்கள் இணை வலைத்தளமான Zee Business இன் கூற்றுப்படி, தற்போது ஜூலை தரவு வெளியிடப்பட்டதை அடுத்து, அகவிலைப்படி எண்ணிக்கை 47.14 சதவீதத்தை எட்டியுள்ளது. அதே நேரத்தில், முன்னதாக இந்த எண்ணிக்கை 46.24 சதவீதமாக இருந்தது. இருப்பினும் இதன் இறுதி எண் டிசம்பர் 2023 க்குள் வரும், அதற்காக ஊழியர்கள் இப்போது காத்திருக்க தான் வேண்டும்.


மேலும் படிக்க - 5 ஆண்டுகளில் அதிரடி லாபம் வேண்டுமா? இந்த 5 இடங்களில் முதலீடு செய்தால் போதும்


செப்டம்பரில் ஹைக் அறிவிக்கப்படலாம்:
அரசு ஊழியர்களுக்கு விரைவில் அதாவது இந்த மாதம் (செப்டம்பர் மாதத்தில்) அகவிலைப்படி உயர்வை (DA Hike) வழங்க முடியும். அதன்படி 2023 ஜனவரி முதல் ஜூலை வரையிலான அகவிலைப்படி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இம்முறையும் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளது. தற்போது ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவீதமாக உள்ளது. அரசு ஊழியர்களுக்கு உயர்வு அறிவிப்புக்கு பின், இது 46 சதவீதத்தை எட்டும் எனது என்பது குறிப்பிடத்தக்கது.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை:
இந்நிலையில் தற்போது இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் அரசு தரப்பில் இருந்து இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் ஜனவரி 2023 இல் அகவிலைப்படி அதிகரிப்புக்கான (DA Hike News) புள்ளிவிவரங்கள் வரத் தொடங்கியுள்ளது, இதனால் அகவிலைப்படி 47 சதவீதத்தை எட்டியுள்ளது என்று கூறப்படுகிறது.


ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு 
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowances) ஆண்டுதோறும் இரு முறை அதிகரிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் நிதி அமைச்சகம் அதை அங்கீகரிக்கிறது. தொழில்துறை பணவீக்க புள்ளிவிவரங்களுடன் (AICPI) இணைத்து தொழிலாளர் அமைச்சகம் இதை தீர்மானிக்கின்றது. ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகள் அகவிலைப்படி உயர்வுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள தேதிகள் ஆகும்.


வழக்கமாக மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும். இந்த அகவிலைப்படி உயர்வானது, மத்திய அரசு ஊழியர்கள் பணவீக்கம் மற்றும் அதிகரிக்கும் விலைவாசியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.


மேலும் படிக்க | 7th pay Commission ஜாக்பாட் செய்தி: இந்த நாளில் டிஏ ஹைக் அறிவிப்பு... ஊதிய உயர்வு கணக்கீடு இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ