புது டெல்லி: அடுத்த ஆண்டு முதல், உங்கள் சம்பளம் கொஞ்சம் குறைந்துவிடும், ஆனால் உங்கள் வயோதிகம் மேம்படும். புதிய ஊதிய விதி ஏப்ரல் 2021 முதல் பொருந்தும். இது உங்கள் In hand salary, வருங்கால வைப்பு நிதி மற்றும் கிராச்சுட்டி ஆகியவற்றில் வித்தியாசத்தை ஏற்படுத்தும். அது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்பதைப் பார்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உங்கள் சம்பள சீட்டு (Salary Slip) மாறும்



அரசாங்கம் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் (Parliament) ஊதியக் குறியீட்டை நிறைவேற்றியிருந்தது. அடுத்த நிதியாண்டு முதல் இது செயல்படுத்தப்பட உள்ளது. இது தனியார் துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.


ALSO READ | சம்பளக் கணக்கின் நன்மைகள் பற்றி தெரியுமா?... இதை வங்கி உங்களிடம் கூறாது..!


மொத்த சம்பளத்தில் 50% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது



ஒரு தையார் செய்தி நிறுவனம் வெளியிடப்பட்ட செய்தியின்படி, புதிய விதிப்படி, ஊழியர்களுக்கான கிராவிட்டி, PF போன்ற அனைத்து கொடுப்பனவுகளும் மொத்த சம்பளத்தில் (Total Salary) 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது. அதாவது, ஏப்ரல் 2021 முதல், நிறுவனங்கள் மொத்த சம்பளத்தில் 50% அல்லது அதற்கு மேற்பட்ட அடிப்படை சம்பளத்தை வைத்திருக்க வேண்டும். இந்த புதிய ஊதிய விதிக்குப் பிறகு, சம்பள கட்டமைப்பில் பெரிய மாற்றம் இருக்கும். இந்த புதிய விதியின் சில நன்மைகள் மற்றும் சில தீமைகள் உள்ளன.


புதிய ஊதிய விதியின் நன்மைகள்



இந்த Wage Rule விதியின் வல்லுநர்கள் இதன் நன்மை என்னவாக இருக்கும் என்று கூறுகிறார்கள், இது ஓய்வுக்குப் பிறகுதான் அறியப்படும். ஏனெனில் புதிய விதியின் கீழ் கிராச்சுட்டியின் அளவு அதிகரிக்கும். ஏனெனில் அடிப்படை சம்பளத்தின் படி கிராச்சுட்டி கணக்கிடப்படுகிறது, மேலும் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதன் மூலம் கிராச்சுட்டியின் அளவும் அதிகரிக்கும். கிராச்சுட்டி தவிர, நிறுவனம் மற்றும் ஊழியர்களின் PF பங்களிப்பும் அதிகரிக்கும். இது நீண்ட காலத்திற்கு ஊழியர்களின் சேமிப்பையும் அதிகரிக்கும்.


ALSO READ | கொரோனா காலத்தில் வேலை இழந்து இருந்தால் 50% சம்பளத்தை அரசு வழங்குமா? பெறுவது எப்படி?


புதிய ஊதிய விதியின் தீமைகள்



புதிய ஊதிய அளவிலான விதியில், உங்கள் Inhand Salary  குறைக்கப்படும், இதன் காரணமாக, அதிக சம்பளம் உள்ள அதிகாரிகளுக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும், அதன் கொடுப்பனவுகள் சம்பளத்தில் 70-80 சதவீதம் ஆகும். இது நிறுவனங்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கிராச்சுட்டி மற்றும் பி.எஃப் பங்களிப்பு முன்பை விட அதிகமாக அதிகரிக்கும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR