ஒரு தனியார் வேலையில் இருக்கும் நபர்கள், ​​​​ஆரம்பத்திலிருந்தே ஓய்வூதிய திட்டமிடல் செய்வது புத்திசாலித்தனம். இளமையிலேயே சேமிக்க தொடங்கினால் எளிதாக கோடீஸ்வரன் ஆகலாம். நீங்கள் நீண்ட காலம் முதலீடு செய்யும் போது, அதிக பணத்தை நீங்கள் சேர்க்கலாம். அதற்கு உதவும் முதலீட்டு திட்டங்களில் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபியும் ஒன்று. சந்தையுடன் இணைக்கப்பட்டிருந்தாலும், இந்த திட்டம் மிகவும் பிரபலமாகிவிட்டது. நேரடியாகப் பங்குகளில் முதலீடு செய்வதோடு ஒப்பிடுகையில், ரிஸ்க் சற்றுக் குறைவு. மேலும், நீண்ட காலத்திற்கு சராசரி வருமானம் 12 சதவீதமாகக் கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த திட்டத்தின் உதவியுடன், முதலீட்டாளர்களின் பணம் பன்மடங்காவது துரிதமாக  நடக்கிறது. நீங்கள் விரும்பினால், வெறும் 2000 ரூபாயில் தொடங்கி SIP மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களைச் சேர்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணத்தை பன்மடங்காக்கும் எஸ்ஐபி திட்டம்


நீங்கள் SIP இல் முதலீடு செய்கிறீர்கள் என்றால், வேலையில் சேர்ந்த உடனேயே  அதில் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும். நீங்கள் 25 வயதில் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், பிறகு 60 வயது வரை முதலீடு செய்வீர்கள் என்பதால் ஓய்வூதிய தேவைக்காக நிதியை சேர்க்க உங்களுக்கு 35 ஆண்டுகள் கிடைக்கும். இதைத் தவிர, ஒவ்வொரு வருடமும் உங்கள் சம்பளம் அதிகரிக்கும் போது, முதலீட்டுத் தொகையில் 10 சதவிகிதம் டாப்-அப் செய்ய வேண்டும். உதாரணமாக, நீங்கள் 25 வயதில் 2000 ரூபாயில் முதலீடு செய்யத் தொடங்கினால், ஒரு வருடத்திற்கு 2000 ரூபாயை டெபாசிட் செய்து அடுத்த ஆண்டில் 10% தொகையை அதிகரிக்க வேண்டும். இந்த வகையில், ஆண்டுக்கு ஆண்டு சம்பளம் அதிகரிக்கும் போது, ​​ஒவ்வொரு ஆண்டும் முதலீடு செய்யும் தொகையை 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.


மேலும் படிக்க | ஜாலி! ஜாலி... ரயில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை மலிவாகிறது! இனி ஜிஎஸ்டி கிடையாது!


உதாரணத்துடன் புரிந்து கொள்ளலாம்


நீங்கள் 25 வயதில் ரூ.2000 எஸ்ஐபியை தொடங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆரம்பித்த பிறகு, இந்தக் கணக்கில் ஒரு வருடம் முழுவதும் ரூ.2,000 மட்டுமே டெபாசிட் செய்தால் போதும். அடுத்த ஆண்டு, 2000 ரூபாயில் 10 சதவீதம் அதாவது ரூ.200 உயர்த்தப்பட வேண்டும். இந்த வழியில், அடுத்த ஆண்டு இந்த எஸ்ஐபி ரூ.2,200 ஆக இருக்கும். அடுத்த ஆண்டு, ரூ.2,200க்கு 10 சதவீதம் என்ற விகிதத்தில் ரூ.220 அதிகரிக்க வேண்டும், அத்தகைய சூழ்நிலையில் உங்கள் எஸ்ஐபி ரூ.2,420 ஆகிவிடும். இப்படி ஒவ்வொரு வருடமும் இருக்கும் தொகையை 10 சதவீதம் அதிகரித்து 60 வருடங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.


இதன் மூலம் ₹ 3,55,33,879 பணத்தை சேர்க்கலாம்


2000 ரூபாய் முதல் SIP முதலீட்டை தொடங்கி 10 சதவிகிதம் வருடாந்திர டாப்-அப் செய்து 35 வருடங்கள் முதலீடு செய்தால், உங்கள் மொத்த முதலீடு 65,04,585 ரூபாயாக இருக்கும். சராசரி வருவாயான 12 சதவீதத்தைப் பார்த்தால், வட்டியில் இருந்து மட்டும் ரூ.2,90,29,294 கிடைக்கும். முதலீடு செய்யப்பட்ட தொகை மற்றும் வட்டி உட்பட, 35 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் ரூ.3,55,33,879 உங்களிடம் இருக்கும். அதேசமயம் இந்த முதலீட்டுக்கு 15 சதவீத வட்டி கிடைத்தால், லாபம் கிட்டத்தட்ட இருமடங்காக இருக்கும், மேலும் மொத்தம் ரூ.6,70,24,212 உங்களிடம் இருக்கும்.


மேலும் படிக்க | பணி ஓய்வுக்கு முன்னரே NPS மூலம் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்: பட்டியல் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ