செப்டம்பர் முடிய கடைசி சில நாட்கள் மட்டுமே உள்ளன. சில முக்கியமான நிதிப் பணிகளை முடிக்க இந்த மாதம் கடைசி வாய்ப்பு. பல பணிகளுக்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. சிறு சேமிப்பு திட்டங்களுடன் ஆதாரை இணைப்பது முதல் டிமேட் கணக்கை புதுப்பித்தல் மற்றும் பல பணிகள் இதில் அடங்கும். பணிகளின் பட்டியல் நீளமானது, ஆனால் பணிகள் மிகவும் கடினமானவை அல்ல, எனவே கீழே உள்ள விவரங்களை விரைவாகப் படிக்கவும், ஏதேனும் முழுமையடையாத வேலை இருந்தால் 30 நாட்களுக்கு முன் அதை முடிக்கவும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. ஆதார் இணைப்பு


PPF,செல்வ மக சேமிப்பு திட்டம் என்னும் சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana), அஞ்சலக திட்டம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் (Senior Citizens Saving Scheme) போன்ற சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் KYC ஆக PAN-ஆதாரை வழங்குவது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கணக்கைத் திறக்கும் போது இந்த இரண்டு ஆவணங்களையும் நீங்கள் கொடுக்கவில்லை என்றால், உங்களுக்கு செப்டம்பர் 30 வரை மட்டுமே நேரம் உள்ளது. முன்பு ஆதார் தேவையில்லை, ஆனால் இப்போது ஆதார் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். மார்ச் 2023க்கு முன் கணக்கு தொடங்கப்பட்டிருந்தால், இப்போது ஆதாரை சமர்ப்பிக்கவும், இல்லையெனில் உங்கள் கணக்கு முடக்கப்படும்.


2. டிமேட் கணக்கு


மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் நாமினியின் பெயரைத் தங்கள் கணக்கில் சேர்க்க வேண்டும். அனைத்து தனிப்பட்ட டிமேட் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு செப்டம்பர் 30 வரை தங்கள் நாமினியை பரிந்துரைக்க அல்லது ஒரு அறிவிப்பை நிரப்புவதன் மூலம் திட்டத்திலிருந்து விலகுவதற்கு அவகாசம் உள்ளது. அவ்வாறு செய்யாத பட்சத்தில், முதலீட்டாளர்களின் டீமேட் கணக்கு மற்றும் போர்ட்ஃபோலியோ முடக்கப்பட்டு, அவர்கள் முதலீடுகளை திரும்பப் பெற முடியாது.


மேலும் படிக்க | உங்கள் வங்கி கணக்கில் இருந்த 295 ரூபாய் காணவில்லையா... இது உங்களுக்கான எச்சரிக்கை!


3. 2000 ரூபாய் நோட்டுகள்


செப்டம்பர் 30, 2023 ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெற அல்லது மாற்றுவதற்கான கடைசித் தேதியாகும். 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி மே மாதம் அறிவித்தது. அதன் பிறகு இந்த நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வங்கிக்குச் சென்று குறைந்த மதிப்புள்ள நோட்டுகளைப் பெறவோ அல்லது வங்கிக்குத் திரும்ப அளிக்கவோ அடுத்த நான்கு மாதங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. உங்களிடம் இன்னும் இந்த நோட்டுகள் இருந்தால், செப்டம்பர் 30 வரை மட்டுமே உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.


4. SBI WeCare சிறப்பு FD


பாரத ஸ்டேட் வங்கியின் சிறப்பு நிலையான வைப்புத் திட்டமான SBI WeCare திட்டத்திற்கான காலக்கெடு முடிவடைகிறது. தற்போதைய புதுப்பிப்பின்படி, மூத்த குடிமக்களுக்காக இயக்கப்படும் இந்த சிறப்புத் திட்டத்தில் செப்டம்பர் 30, 2023 அன்று நிறைவடைகிறது. அது வரை அதில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் 7.50% வட்டி கிடைக்கும்.


5. IDBI அம்ரித் மஹோத்சவ் FD


ஐடிபிஐ (IDBI) வங்கி சிறப்பு அமிர்த மஹோத்சவ் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை தொடக்கியுள்ளது, இதில் நீங்கள் செப்டம்பர் 30 வரை முதலீடு செய்யலாம். 375 நாட்களுக்கு FD இல் 7.10% வரை வட்டி விகிதம் கிடைக்கும். அதே நேரத்தில், மூத்த குடிமக்கள் 7.60 சதவீத வட்டியைப் பெறலாம்.


6. எல்ஐசி தன் விருத்தி
ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் எல்ஐசி தன் விருத்தி திட்டமும் செப்டம்பர் 30ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் பாதுகாப்பு மற்றும் சேமிப்பை செய்யலாம், அதாவது, நீங்கள் காப்பீடு பெறுவது மட்டுமல்லாமல், உங்கள் பணமும் பெருகும்.


மேலும் படிக்க | PPF: பிபிஎஃப்பில் இருந்து சுலபமாக கடன் பெற டிப்ஸ்! வட்டியும் குறைவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ