PAN Card: நம் நாட்டில் சில ஆவணங்கள் மிக முக்கியமான ஆவணங்களாக பார்க்கப்படுகின்றன. இவற்றில் பான் கார்டும் ஒன்று. பான் கார்டு என்பது நிதி பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆவணம். வங்கிக் கணக்கைத் திறப்பது முதல் வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்வது வரை PAN கார்டு பல இடங்களில் செல்லுபடியாகும் ஆவணமாகும். KYC க்கும் இதுவே பயன்படுத்தப்படுகிறது. பான் கார்டு மிகப்பெரிய சட்டப்பூர்வமான அடையாள அட்டையாக கருதப்படுகிறது. ஆதார் உருவாக்கப்பட்ட பிறகும், அதனுடன் பான் கார்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. இதனால் அனைவரது நிதி வரலாற்றையும் கண்காணிக்க முடியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பான் கார்டு வைத்திருக்கும் பலருக்கு அதை பற்றிய சில முக்கிய விஷயங்கள் பற்றி தெரியாது. பான் கார்டுக்கு ஏதேனும் காலாவதி தேதி (Expiry Date) உள்ளதா? பான் கார்டு எத்தனை நாட்களுக்கு சரியான ஆவணமாக (Pan Card validity) கருதப்படுகிறது? உங்கள் பான் கார்டின் வேலிடிட்டி பற்றி இன்னும் உங்களுக்கு தெரியாது என்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். 


PAN Card -ஐ யார் வழங்குகிறார்கள்?


பான் கார்டு  NSDL (National Securities Depository Limited) மூலம் வழங்கப்படுகிறது. பான் அட்டை வைத்திருப்பவரின் நிதி பரிவர்த்தனைகள் அனைத்தும் அதன் மூலம் கண்காணிக்கப்படுவதால், பான் கார்டு சட்ட ஆவணமாக கருதப்படுகின்றது. வரி ஏய்ப்பைத் தடுக்கவும் பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், அதன் செல்லுபடியாகும் தன்மையைப் பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம் ஆகும். அதாவது எத்தனை நாட்களுக்கு அது செல்லுபடியாகும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.


PAN Card எவ்வளவு காலம் செல்லுபடியாகும்?


பான் கார்டுக்கு குறிப்பிட்ட செல்லுபடி காலம் எதுவும் கிடையாது. பான் கார்டின் செல்லுபடியாகும் காலம் வாழ்நாள் முழுவதுமாகும். பான் கார்டு வைத்திருக்கும் நபரின் மரணத்திற்குப் பிறகுதான் அதை ரத்து செய்ய முடியும். அல்லது இறப்புச் சான்றிதழின் உதவியுடன், தேவையான அனைத்து இடங்களிலும் KYC -ஐ புதுப்பிக்க வேண்டும். 


பான் கார்ட் வைத்திருக்கும் நபர் இறந்த பிறகுதான் அவரது பான் கார்டு காலாவதியாகிறது. பான் கார்டு வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் ஒரு ஆவணம். பான் கார்டில் 10 இலக்க எண்ணெழுத்து எண் உள்ளது. பான் எண்ணில் பான் கார்டு வைத்திருக்கும் நபரைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் இருக்கும். சட்டப்படி, ஒருவர் ஒரு பான் கார்டு மட்டுமே வைத்திருக்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருந்தால் அபராதம் விதிக்கும் விதிமுறை உள்ளது.


மேலும் படிக்க | Budget 2024: சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பட்ஜெட்டில் மிகப்பெரிய பரிசு, வரி விலக்கு


ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண்ணை வைத்திருப்பது சட்டவிரோதமானது


- வருமான வரி விதிகளின்படி (Income Tax Rules), ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண்ணை வைத்திருந்தால், அது சட்டவிரோதமானது. 


- இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம். 


- வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 272B இன் விதிகளின் கீழ், ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருந்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். 


- உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண்கள் இருந்தால், அதை உடனடியாக சரண்டர் செய்வது நல்லது. 


- உங்களிடம் கூடுதலாக உள்ள பான் கார்டை ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் ஒப்படைக்கலாம்.


PAN Card -ஐ பெறுவது எப்படி?


- வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பான் கார்டை பெறலாம். 


- இதற்கு முதலில் இ-ஃபைலிங் போர்ட்டலுக்குச் சென்று 'Instant PAN through Aadhaar' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். 


- இதற்குப் பிறகு 'Get New PAN' என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 


- இப்போது உங்களிடம் ஆதார் எண் கேட்கப்படும். 


- அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.


- OTP சரிபார்ப்பு முடிந்ததும், உங்களுக்கு e-PAN வழங்கப்படும். 


- தேவைப்பட்டால் ஃபிசிக்கல் பான் அட்டையையும் ஆர்டர் செய்யலாம்.


மேலும் படிக்க | PF உறுப்பினர்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ்: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், ஊழியர்களுக்கு கொண்டாட்டம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ