EPF Withdrawal: அலுவலக பணிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சார்பில் பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான பணம், அவர்களது சம்பளத்தில் இருந்து கழிக்கப்படுகிறது. பொதுவாக ஊழியர்களுக்கு இது ஓய்வூதிய நிதிக்கான முதல் படியாக இருக்கும். உங்கள் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை கழித்து அந்த தொகையை பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறது. அதே அளவு தொகையை நிறுவனமும் ஊழியரின் கணக்கில் டெபாசிட் செய்யும். அந்த தொகைக்கு அரசாங்கம் பிஎஃப் சந்தாதாரர்களுக்கு வருடாந்திர வட்டியும் வழங்குகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உங்களுக்கு மாதா மாதம் பிஎஃப் தொகை (PF Amount) கழிக்கப்படுகின்றதா? நீங்களும் ஒரு பிஎஃப் சந்தாதாரரா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.  நீங்கள் சம்பளம் வாங்குபவராக இருந்தால், PF-ல் டெபாசிட் செய்யப்பட்ட பணம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதனுடன், PF சம்பளத்தின் மிக முக்கியமான அங்கமாக கருதப்படுகிறது. பொதுவாக நாம் பணி ஓய்வு பெறும்போது பிஎஃப் பணத்தை எடுக்கிறோம். எனினும், சில அவசர தேவைகளின் போதும், சில சிறப்பு சந்தர்ப்பங்களிலும் நமக்கு கூடுதல் நிதி தேவைப்படும் போது பிஎஃப் பனத்தை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். 


பிஎஃப் சந்தாதாரர்கள் இப்போது பிஎஃப் பணத்தை எடுக்க எங்கும் அலையத் தேவையில்லை. மிக எளிய வழிகளில் நாம் பிஎஃப் பணத்தை எடுக்க முடியும். பிஎஃப் தொகை எப்போது பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்வது முக்கியம். 


பணி ஓய்வுக்கு பிறகு பிஎஃப் தொகையை எடுப்பதை தவிர, சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களிலும் பிஎஃப் சந்தாதாரர்கள் பிஎஃப் தொகையை முழுமையாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட தொகையையோ எடுக்கலாம். 


மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கொரோனா வைரஸ் தொற்று பரவிய காலத்தில் ஊழியர்களுக்கு முன்கூட்டியே, அதாவது அட்வான்சாக பணம் எடுக்கும் வசதி வழங்கப்பட்டது. பிஎஃப் விதிமுறைகளின் படி, பணியாளர்கள் வீடு வாங்குதல், குழந்தைகளின் கல்வி, திருமணம், வீட்டை பழுதுபார்த்தல் போன்ற பல நோக்கங்களுக்காக தங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம்.


இது தவிர, பணியை விட்டு வெளியேறினாலும், பணியாளர்களுக்கு பணம் எடுக்கும் வசதியையும் EPFO ​​வழங்குகிறது. பணியை விட்டு விலகியவுடன் ஊழியருக்கு ஒரு மாதத்திற்குள் அடுத்த வேலை கிடைக்கவில்லை என்றால், அத்தகைய சூழ்நிலையில் அவர் 75 சதவீத தொகையை திரும்பப் பெறலாம்.


மேலும் படிக்க | நேபாளம் டூர் செல்ல பிளானா... IRCTC வழங்கும் அசத்தல் பேக்கேஜ்..!!


வீட்டில் இருந்தபடியே PF தொகையை எடுப்பதற்கான வழிமுறை: 


ஆன்லைனில் PF இலிருந்து பணம் எடுக்கும் செயல்முறை


- EPFO இன் உறுப்பினர் போர்ட்டலுக்கு செல்லவும்.
- இதற்குப் பிறகு, மெனுவில் உள்ள Services விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- இதற்குப் பிறகு For Employees என்பதைக் கிளிக் செய்யவும்.
- இப்போது Member UAN Online Services -ஐத் தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது நீங்கள் UAN மற்றும் கடவுச்சொல் உதவியுடன் லாக் இன் செய்ய வேண்டும்.
- Online Services -இல் கிளைம் படிவம்-31, 19 & 10C ஐத் தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது நீங்கள் வங்கிக் கணக்கைச் சரிபார்க்க வேண்டும்.
- ஒப்பந்தச் சான்றிதழை (Certificate of Undertaking) அக்செப்ட் செய்ய வேண்டும்.
- மேலும் Proceed for Online Claim என்ற விருப்பத்தையும் கிளிக் செய்யவும்.
- புதிய படிவத்தில், 'I Want To Claim For' என்பதற்கு முன்பாக டிராப்டவுனிலிருந்து பிஎஃப் அட்வான்ஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- பணத்தை திரும்பப் பெறுவதற்கான காரணத்தையும் தேவையான தொகையையும் குறிப்பிடவும்.
- இப்போது செக் பாக்சை டிக் செய்து செயல்முறையை முடிக்க வேண்டும்.
- அதன் பிறகு, நிலையைச் சரிபார்க்க ரெஃபரன்ஸ் எண்ணைக் குறித்துக்கொள்ளவும்.


மேலும் படிக்க | Income Tax Return : வருமான வரி செலுத்துவோர் கவனத்துக்கு... ITR பைல் செய்வதற்குமுன் தெரிந்துகொள்ளவேண்டியவை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ