காருக்குள் பாலியல் உறவு வைத்துக்கொண்ட ஜோடியினை குருகிராம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹரியானாவின் குருகிராம் செக்டார்-15 பகிதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. காருக்குள் தகாத முறையில் இருந்த இருவரை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தெரியபடுத்தியுள்ளனர். விஷயமரிந்து சம்வயிடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்துள்ளனர்.


புகார் அளித்த பெண்மனி தெரிவிக்கையில்,.. தன் வீட்டின் அருகில் நிறுத்தி இருந்த காரில் தவறான ஒலிகள் வந்ததினை அடுத்து காரின் கதவை திறக்க முயற்சிக்கையில் காரின் உள் இருந்து 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும், 20 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் வெளியே வந்துள்ளனர். 


இதனையடுத்து சம்பந்தப்பட்ட இருவரின் மீதும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குருகிராம் காவல்துறையினர் தெரிவிக்கையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் மீது IPC 354A மற்றும் IPC 354B பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. 


கைது செய்யப்பட்ட போது இருவரும் குடி போதையில் இருந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் அவர்களின் பெயர் ஹாரஷ்(20) எனவும் குறிப்பிட்டுள்ளனர். தற்போது அவர் காவல்துறை கண்கானிப்பில் இருப்பதாகவும் தெரிகிறது. மேலும் இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயரினை காவல்துறை வெளியிடவில்லை.