ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்று வரும் கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம், வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


21_வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை வேல்ஸ் இளவரசர் சார்லஸ் தொடங்கி வைத்தார். அங்கு பல கலைநிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. காமன்வெல்த் போட்டி மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். இந்த போட்டியில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்கின்றன. 


ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் கொடியை பிவி.சிந்து தாங்கி செல்கிறார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 218 இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். 17 விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்கிறது. 


இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் ஆடவர் 10 மீ.ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஜித்து ராய்- க்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. மேலும் ராஜஸ்தானைச் சேர்ந்த ஓம் மிதர்வால் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.