தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீக்கப்பட்டதை அடுத்து, அமைச்சர் கடம்பூர் ராஜூ சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடியில் ஸ்டர்லைட் போராட்டங்கள் ஓய்ந்து அமைதி நிலை திரும்புவதால் 144 தடை உத்தரவினை வாபஸ் பெறுவதாக இன்று காலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்தார். 


இதனையடத்து இன்று காலை 8.00 மணிமுதல் 144 தடை உத்தரவு நீக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தூத்துகுடியில் சேதமடைந்த பகுதிகளை பார்வியிட அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி பயணம் மேற்கொண்டார். சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்ட அவர் போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்.


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ம் தேதி  100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.


இச்சம்பவத்தால் கடந்த மூன்று நாட்களாக அரசு பேருந்துகள் இயக்கபடாமல் இருந்தது. இதனையடுத்து கடந்த 25-ஆம் நாள் காவல்துறை பாதுகாப்புடன் பேருந்துக்கள் இயக்கப்பட்டன.


இந்நிலையில், தூத்துக்குடியில் ஸ்டர்லைட் போராட்டங்கள் ஓய்ந்து அமைதி நிலை திரும்புவதால் கடந்த 21-ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்வதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள சந்தீப் நந்தூரி அறிவித்தார்.


இந்நிலையில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று காலை பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது தூத்துகுடியில் சேதமடைந்த பகுதிகளை அவர் பார்வையிட்டார். பின்னர் ஆட்சியருடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.


இவரையடுத்து நாளை தூத்துக்குடி செல்லும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.