திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திருச்சி முக்கொம்புவில் இருந்து கடலூா் வரை காவிரி உரிமை மீட்பு பயணம் இன்று நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தின் காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில்  தொடர் போராட்டங்கள்  நடத்தப்பட்டு வருகின்றன.


முன்னதாக, நேற்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் சென்னையில் நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடா் கழகம் என மொத்தம் 9 கட்சிகள் கலந்துக்கொண்டனர்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியது, 


காவிரி உரிமைப் போராட்டத்தின் அடுத்தகட்டமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாளை திருச்சியிலிருந்து சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி “காவிரி உரிமை மீட்பு பயணம்” தோழமைக் கட்சித் தலைவர்களோடு தொடங்க விருக்கிறேன். அதேபோல வரும் 9-ம் தேதி(திங்கள் கிழமை) அன்று அரியலூா் மாவட்டத்தில் இருந்து கடலூா் நோக்கி நடைபெற உள்ளது. 


இரண்டு கட்டமாக நடைபெறும் “காவிரி உரிமை மீட்பு பயணம்”  முதல் கட்டமாக திருச்சி முக்கொம்புவில் இருந்து கடலூா் வரையிலான பயணம் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும். இரண்டாவது கட்டமாக அரியலூா் மாவட்டத்தில் இருந்து கடலூா் நோக்கி ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறும் என்றார்.


இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திருச்சி முக்கொம்புவில் இருந்து கடலூா் வரை காவிரி உரிமை மீட்பு பயணம் இன்று நடைபெற்றது.


அப்போது தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது....! 


இது அரசியலுக்காக நடைபெறும் பயணம் அல்ல. தமிழக உரிமையை மீட்டெடுக்கவே இந்த நடைபயணம் என்று கூறினார்.


தொடர்ந்து அவர், மத்திய அரசுக்கு அழுத்தம் தர தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசை கண்டிக்கும் நிலையில், தமிழக அரசு இல்லை. நடைபயணம் முடியும் முன்பே கூட, உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரலாம் என ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். காவிரி உரிமை மீட்பு பயணம் வெற்றி பெறும் என கூறினார்.


மேலும் அவர், சென்னையில் வரும் ஏப்ரல் 16-ம் தேதி அன்று, எஸ்சி எஸ்டி விவகாரத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் உச்சநீதிமன்ற உத்தரவை திரும்ப பெற வழியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.