ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அசோக் தன்வர் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராஜினாமா!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கான டிக்கெட் விநியோகத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி சோனியா காந்தியின் இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்திய சில நாட்களில், முன்னாள் ஹரியானா காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வார் சனிக்கிழமை கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். தன்வர் வியாழக்கிழமை கட்சியின் அனைத்து தேர்தல் குழுக்களிலிருந்தும் ராஜினாமா செய்த போதிலும், அவர் ஒரு சாதாரண கட்சி ஊழியராக தொடர்ந்து பணியாற்றுவார் என்று கூறியதையடுத்து இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்சியின் நலனுக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு மாநிலத்தில் எதிர்க்கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கோஷமிட்டவர்கள் மீது முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால் ஹரியானாவில் காங்கிரஸ் ஹூடா காங்கிரஸாக மாறியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.


அரியானா மாநில சட்டசபையில் உள்ள 90 இடங்களுக்கு வரும் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அரியானா மாநிலத்தில் எம்.எல்.ஏ. சீட் 5 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்படுவதாக குற்றம்சாட்டிய அம்மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் முன்னர் காந்தி ஜெயந்தி தினத்தன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.



குறிப்பாக, சோஹ்னா தொகுதியில் 5 கோடி ரூபாய் பெற்றுகொண்டு வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்த அசோக் தன்வர், சீட் வழங்கும் நடைமுறையே நியாயமாக இல்லாத போது வேட்பாளர்கள் எப்படி வெற்றி பெறுவார்கள்? என்றும் கேள்வி எழுப்பினார். இன்று பாஜக எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்களில் 14 பேர் முன்னர் காங்கிரஸ் கட்சியால் சீட் வழங்கப்படாமல் நிராகரிக்கப்பட்டு, அதிருப்தியால் வெளியேறிச் சென்றவர்கள். 7 எம்.பி.க்கள் காங்கிரஸ் பின்புலம் கொண்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.


இந்நிலையில்,  தனது எதிர்ப்புக்கு உரிய பலன் கிடைக்காததால் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து ராஜினாமா செய்து விட்டதாக அசோக் தன்வர் தெரிவித்துள்ளார்.