புது டெல்லி: 16 லட்சம் மாணவர்கள் பங்கு பெறக் கூடிய நீட் தேர்வுகளை ஒத்தி வைக்க முடியாது எனக்கூறி நீட் தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தனர் உச்சநீதிமன்றம் நீதிபதிகள். இதனையடுத்து செப்டம்பர் 12 ஆம் தேதி நீட் தேர்வு கண்டிப்பாக நடைபெறும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நீட் தேர்வை (NEET EXAM 2021) ஒத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் நீதிபதிகள், பல லட்சம் மாணவ -மாணவிகள் பங்கேற்கும் நீட் தேர்வுகளை ஒத்தி வைக்க முடியாது. மேலும் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரிய அனைத்து மனுக்களையும் நிராகரித்தது.


மற்ற தேர்வுகள் நடைபெறும் நாளில் நீட் 2021 நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. எனவே நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என சில மாணவர்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது, "16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகிறார்கள். சில மாணவர்களின் வேண்டுகோளின் பேரில் அதை ஒத்திவைக்க முடியாது என உச்சநீதிமன்றம் நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.


ALSO READ | நீட் தேர்வு முறையில் மாற்றம், இண்டர்னல் சாய்ஸ் உண்டு


இந்த மனுவை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நிச்சயமற்ற தன்மையை நாங்கள் விரும்பவில்லை. தேர்வு நடைபெறும் என்று நீதிபதி ஏ.எம்.கான்வில்கர், நீதிபதி ஹிருஷிகேஷ் ராய் மற்றும் நீதிபதி சிடி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தெரிவித்துள்ளது.


ALSO READ | NEET 2021: பதிவு செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டது: முழு விவரம் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR