போபாலில் பிரக்யா தாகூர் முன்னிலை... காங்கிரஸ் கட்சியின் கம்பியூட்டர் பாபா பூஜைக்கு பலன் கிடைக்குமா?....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர்த்து 542 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தலும், தமிழகம், புதுச்சேரி உட்பட சில மாநிலங்களில் சட்டசபை இடைத்தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை எட்டு மணியளவில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இதுவரையில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது. போபால் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரக்யா தாகூர் முன்னிலையில் உள்ளார்.


மத்திய பிரதேசத்தின் போபால் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் நிறுத்தப்பட்டார். அவருக்கு எதிராக பாஜக மலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளியான பிரக்யா தாகூரை நிறுத்தியது. அந்த வழக்கிலிருந்து ஜாமீனிலிருந்து வெளியே வந்த அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்டுத்தியது. கடந்த வாரம் கோட்சே குறித்து சர்ச்சை கருத்த தெரிவித்த பிரக்யா  தேசிய ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டார்.


இந்நிலையில் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் சூழலில் நாடு முழுவதும் பாஜக 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதேபோல் போபாலில் போட்டியிட்ட பிரக்யா முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திக்விஜய் சிங் பின்னடைவை சந்தித்துள்ளார்.