ஷாஹீன் பாக் தேர்தலுக்குப் பின் ஜாலியன்வாலா பாக் ஆக மாறலாம்: ஒவைசி
![ஷாஹீன் பாக் தேர்தலுக்குப் பின் ஜாலியன்வாலா பாக் ஆக மாறலாம்: ஒவைசி ஷாஹீன் பாக் தேர்தலுக்குப் பின் ஜாலியன்வாலா பாக் ஆக மாறலாம்: ஒவைசி](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2020/02/06/154479-asaduddin-owaisi.jpg?itok=9LApFjFS)
டெல்லி தேர்தலுக்கு பிறகு ஷாகீன் பாக் லியன்வாலா பாக் போன்று மாறலாம் என AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்!!
டெல்லி தேர்தலுக்கு பிறகு ஷாகீன் பாக் லியன்வாலா பாக் போன்று மாறலாம் என AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்!!
டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக 50 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் ஷாஹீன் பாக் நீட்டிப்பை அகற்ற மத்திய அரசு சக்தியைப் பயன்படுத்தக்கூடும் என்று AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி கவலை தெரிவித்துள்ளார். ஹைதராபாத் AIMIM எம்.பி. மேலும் செய்தி நிறுவனமான ANI இடம், மத்திய அரசின் சக்தியைப் பயன்படுத்துவது ஷாஹீன் பாக் ஜாலியன்வாலா பாக்-க்குள் செல்லக்கூடும் என்று கூறினார்.
"அவர்கள் அவர்களை சுட்டுக் கொல்லக்கூடும், அவர்கள் ஷாஹீன் பாக் ஜல்லியன்வாலா பாக் ஆக மாறக்கூடும். இது நடக்கக்கூடும். பாஜக அமைச்சர் 'ஒரு புல்லட் சுட' ஒரு அறிக்கையை வழங்கினார். யார் தீவிரமயமாக்குகிறார்கள் என்பதற்கு அரசாங்கம் பதில் அளிக்க வேண்டும்," என்று ஒவைசி கூறினார்.
தலைநகர் டெல்லியில் உள்ள ஷாகீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றுள்ளனர். 50 நாட்களுக்கும் மேலாக இப்போராட்டம் நநடைபெற்று வருகிறது. இந்த சூல்நிலையில், 70 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்கு வரும் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு பின் ஷாகீன் பாக் காலி செய்யப்பட்டு, போராட்டக்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என பாஜக தலைவவர்கள் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில், இதுபற்றி AIMIM கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்... ‘போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படலாம். ஷாகீன் பாக் இடமானது ஜாலியன்வாலா பாக் போன்று மாறலாம். இது நடக்கக்கூடும். துப்பாக்கியால் சுட வேண்டும் என பாஜக மந்திரி கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் தீவிரமயமாக்குவது யார்? என்பதற்கு அரசாங்கம் பதில் அளிக்க வேண்டும்’ என்றார்.
NPR, NRC குறித்து தொடர்ந்து பேசிய ஒவைசி, ‘2024 ஆம் ஆண்டு வரை என்.ஆர்.சி செயல்படுத்தப்படாது என்று அரசு தெளிவான பதிலை அளிக்க வேண்டும். அவர்கள் ஏன் NPR-க்கு 3900 கோடி ரூபாய் செலவிடுகிறார்கள்? நான் ஒரு வரலாற்று மாணவனாக இருந்ததால் இதை உணர்கிறேன். ஹிட்லர் தனது ஆட்சிக் காலத்தில் இரண்டு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தினார், அதன்பிறகு, யூதர்களை விஷவாயு அறைக்குள் தள்ளினார். நமது நாடு அந்த வழியில் செல்வதை நான் விரும்பவில்லை’ என்றார்.