ஒருவரின் பாலியல் வாழ்க்கை அவரது ஒட்டுமொத்த மன, உடல் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்துடன் இணைந்துள்ளது. நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், உங்கள் படுக்கையறை வாழ்க்கையை அது பாதிக்கும். அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்வதும் பிரச்சனைதான், உடலுறவே வைத்துக்கொள்ளாமல் இருப்பதும் ஒரு வித உளவியல் ரீதியான பிரச்சனைதான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய சமூகத்தை பொருத்தவரை பாலியல் சார்ந்த விஷயங்களோ, அல்லது உடலுறவு சார்ந்த விஷயங்களோ பேசக்கூடாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது குறித்து பேசுவதாலும், பாலியல் சார்ந்த அறிவுகள் வளர்வதாலும் ஒட்டு மொத்தமாக மக்கள் அனைவருக்குமே நண்மைகள் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால், கொஞ்சம் கொஞ்சமாக பள்ளிப்பருவத்திலேயே இது சார்ந்த கல்வியை கற்றுக்கொடுக்க பலர் அறிவுருத்தி வருகின்றனர். காதல், காமம், இச்சை, ஆசை, தொடுதல் போன்ற பல உணவர்வுகளை வெளிப்படுத்த உடலுறவு உபயோகப்படும். இது, காதலர்கள் அல்லது கணவன்-மனைவிக்குள் இருக்கும் இணக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. 


மேலும் படிக்க | நீங்களும் நோமோபோபியா தான் தெரியுமா? உடனே இந்த தவறுகளை திருத்திக்கோங்க


எந்த வகையான உறவு என்றாலும் அங்கு நாம் எதை சிந்திக்கிறோம், எதை பேசுகிறோம் என்பதை பொறுத்து அந்த உறவு மேன்மையான ஒன்றாக அமையும். இது, நமது கருத்துக்களை வெளிப்படுத்தவும் நமக்கு என்ன தேவை என்பதை வெளிப்படையாக பேசவும் உதவுகிறது.  இது, படுக்கையறை வாழ்க்கையிலும் மிகவும் முக்கியம். 


பாலியல் குறித்த தேவைகளை பூர்த்தி செய்ய மட்டும் உரையாடல்கள் பயன்படாது. இது, உடலுறவின் போது இருவருக்கும் ஏற்படும் பிணைப்பையும் அதிகரிக்கிறது. 


உடலுறவின் போது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்:


நம்பகத்தன்மை அதிகரிக்கும்:


உடலுறவின் போதும் அதற்கு முன்பும் பின்பும் உரையாடுவதால் உங்கள் பார்ட்னருடனான உறவில் உங்கலுக்கு இணக்கமும் நம்பகத்தன்மையும் அதிகரிக்கும். இது, தயக்கம், அச்சம் உள்ளிட்டவற்றை விட்டொழிய உதவும். இதை தாண்டி ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் நமபகத்தன்மையையும் உரையாடல்கள் அதிகரிக்கும். 


பாதுகாப்பு முக்கியம்:


உடலுறவின் போது இருவரில் ஒருவருக்கு அசௌகரியம் அல்லது ஏதேனும் வலி, எரிச்சல் போன்ற உணர்வுகள் ஏற்பட்டால் அதை பார்ட்னரிடம் தெரியப்படுத்த வேண்டும். இதை பற்றி கூறவில்லை என்றால் கண்டிப்பாக அது குழப்பத்தையும் மனக்கசப்பையும் ஏற்படுத்தும். பாலியல் ரீதியான தொற்று இருக்கிறதா என்பதை முன்னதாகவே தெரிந்து கொள்வதும் அவசியம். தேவையில்லாத கர்பத்தை தவிர்க்க ஆணுறை அல்லது கருத்தடை மாத்திரைகளை உபயோகிப்பது அவசியம். 


எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தல்:


படுக்கையறையில் எது வேண்டும் எது தேவையில்லை என்பதை உங்கள் பார்ட்னரிடம் முன் கூட்டியே தெரிவித்து விட வேண்டும். இதை முன் கூட்டியே கூறினால் மட்டுமே எதிரில் இருக்கும் மனிதரால் புரிந்து கொள்ள முடியும். ஆதலால், எந்த எதிர்பார்ப்பாக இருந்தாலும் அதை அவரிடம் கூறி தெளிவு படுத்திவிட வேண்டும். இது, உங்கள் படுக்கையறை சுகத்தை அதிகரிக்க உதவும்.


கடைப்பிடிக்க வேண்டிய 3 விஷயங்கள்:


>உங்களது பார்ட்னரின் ஆர்வத்தை எந்த காரணத்தின் கொண்டும் மட்டமாக பேசக்கூடாது. அவர்களது உடல் அமைப்பு எப்படி இருந்தாலும் அது குறித்து அவர் மனம் புண்படும் வகையிலான கருத்துக்களை கூறக்கூடாது. 


>உங்களது பார்ட்னர் நீங்கள் படுக்கையறையில் செய்யும் விஷயங்களில் ஏதாவது ஒன்றை பிடிக்கவில்லை என்று கூறினால் அதை கேட்டுக்கொண்டு அதை சரிசெய்ய முற்பட வேண்டும். அதை விட்டுவிட்டு, அவரிடம் வாக்குவாதம் செய்ய கூடாது. 


>ஏதேனும் ஒரு விஷயத்தை கூறி அவரை சுட்டிக்காட்டுவதை விட்டுவிட்டு, நிறைகளை பாராட்டி பேசலாம். இது, படுக்கையறையில் உங்கள் பார்ட்னர் தைரியமாக செயல்பட உதவும். 


மேலும் படிக்க | வயிற்றில் இந்த பகுதியில் வலி இருக்கா? இவை காரணங்களாக இருக்கலாம்.. ஜாக்கிரதை!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ