Diabetes Control Tips: இளநீர் பல வித ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த ஒரு பானமாக கருதப்படுகின்றது.  இது எந்த வித கலப்படமும் இல்லாத இயற்கையான பானமாக இருப்பதால் இது உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. மேலும் இது டெட்ராபேக்குகள் அல்லது பாட்டில்களில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள் மற்றும் குளிர்பானங்களை விட மிகவும் சிறந்தது. இளநீர் கிராமங்கள் மற்றும் நகரங்களில் மிகுந்த விருப்பத்துடன் உட்கொள்ளப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இளநீர் நமது உடலை நீரேற்றத்துடன் வைத்து உடனடி ஆற்றலைத் தருகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நீரிழிவு நோயாளிகளும் இதை குடிக்கலாமா? இளநீரில் இயற்கையான சர்க்கரையும், சற்று இனிப்பும் இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் அதைக் குடிக்காலாமா கூடாதா என்ற சந்தேகம் எப்போதும் பலருக்கு இருக்கின்றது. இதைப் பற்றி பிரபல உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவிடம் கேட்டோம். அவர் அளித்துள்ள விளக்கத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.


இளநீரில் உள்ள சத்துக்கள்


பாலை விட இளநீரில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளதாக உணவியல் நிபுணர் ஆயுஷி கூறுகிறார். இதில் உள்ள கொழுப்பின் அளவு மிகக் குறைவு. இதை தொடர்ந்து உட்கொள்பவர்களின் உடலில் பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் ஆகியவை எப்போதும் தேவையான அளவு இருக்கின்றன. இளநீர் குடிப்பதன் மூலம், உடலில் இருந்து நச்சுகள் அகற்றப்படுகின்றன. மேலும் இது பல நோய்களின் அபாயத்தையும் தடுக்கிறது.


மேலும் படிக்க | யூரிக் அமில பிரச்சனையா? இந்த காய்கறிகளை தவிர்த்தால் பிரச்சனை குறையும்..


நீரிழிவு நோயாளிகள் இளநீர் குடிக்கலாமா?


நீரிழிவு நோயாளிகள் இளநீர் குடிக்கலாம் என உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் கூறுகிறார். சுகர் நோயாளிகள் இந்த இயற்கை பானத்தை தினமும் குடிக்க வேண்டும். இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்றும் இது இரத்த சர்க்கரை அளவையும் குறைக்க உதவும் என்றும் அவர் தெரிவிக்கிறார். இளநீரின் கிளைசெமிக் குறியீடு (ஜிஐ) குறைவாக இருப்பதால் இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதாக அவர் கூறியுள்ளார். இளநீரில் உள்ள மெக்னீசியம் இன்சுலின் சென்சிடிவிடியை மேம்படுத்த உதவுகிறது. இளநீர் பருகுவதால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைபாடு சரியாவதுடன் உடலுக்கு அற்புதமான ஆற்றலும் கிடைக்கிறது என உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் தெரிவிக்கிறார்.


தேங்காயில் உள்ள வழுக்கையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்


சர்க்கரை நோயாளிகள் இளநீர் பருகிவிட்டு, அந்த தேங்காயில் உள்ள வழுக்கையையும் அதனுடன் சேர்த்து சாப்பிடலாம். ஏனெனில் இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இந்த வழுக்கையை சாப்பிடுவதால் உடல் கொழுப்பும் குறைகிறது. ஆகையால் தேங்காய் வழுக்கை வழக்கமான உணவின் ஒரு பகுதியாக இருப்பது நல்லது. தேங்காய் வழுக்கையில் அதில் அளவில் நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது. இது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | பெரிய தொப்பையை சட்டென தட்டையாக்கும் யோகசனங்கள்! தினமும் காலையில் செய்யுங்கள்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ


 



.