கொரோனா வைரஸ் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க ‘மலேரியா எதிர்ப்பு மருந்துகள்’ குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு கனேடிய சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

COVID-19-ஐ தடுக்க அல்லது சிகிச்சையளிக்க சிலர் நேரடியாக குளோரோகுயின் அல்லது ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வாங்குவதையும் பயன்படுத்துவதையும் குறிப்பிட்டுள்ள கனடா, இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.


READ | இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு; Hydroxychloroquine பக்க விளைவுகள் குறித்து FDA எச்சரிக்கை...


"குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆகியவை கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இந்த மருந்துகள் ஒரு மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்" என்று கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தனது இணையதளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட குறிப்பில் தெரிவித்துள்ளது.


"COVID-19-ஐ தடுக்க அல்லது சிகிச்சையளிக்க சிலர் நேரடியாக குளோரோகுயின் அல்லது ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வாங்குவதையும் பயன்படுத்துவதையும் ஹெல்த் கனடா கவலை கொண்டுள்ளது," இது "கடுமையான இதய தாளப் பிரச்சினைகளை" ஏற்படுத்தக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.


முன்னதாக, ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் மற்றும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இந்த வாரம் மருந்துகள் குறித்து இதேபோன்ற எச்சரிக்கைகளை வெளியிட்டன. மேலும் அமெரிக்காவில் கொரோனாவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை வழங்கப்பட்ட நோயாளிகள் அதிக அளவில் உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 


READ | மத்திய சுகாதார அமைச்சகம் பொது மக்களுக்கு HCQ குறித்து அறிவுரை..!


மலேரியா, லூபஸ் மற்றும் முடக்கு வாதம் போன்ற சில தன்னுடல் தாக்க நோய்களுக்கு சிகிச்சையளிக்க குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன, எனினும் அவை கல்லீரல் அல்லது சிறுநீரக பிரச்சினைகள், குறைந்த இரத்த சர்க்கரை மற்றும் நரம்பு மண்டல பிரச்சினைகள் ஆகியவற்றை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது. "இதய தாளத்தின் விளைவுகள் ... மிகக் கடுமையான சந்தர்ப்பங்களில், அபாயகரமானதாக இருக்கலாம்" என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தற்போது குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு கனேடிய சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.