இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் சில அற்புத மூலிகைகள்: இன்றைய மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால், மக்கள் பல கடுமையான நோய்களுக்கு ஆளாகிறார்கள். உயர் இரத்த அழுத்த பிரச்சனையும் இந்த நோய்களில் அடங்கும். இன்றைய காலகட்டத்தில் முதியவர்களிடம் மட்டுமின்றி இளைஞர்களிடமும் அதிக ரத்த அழுத்த பிரச்சனை காணப்படுகிறது. பொதுவாக, 140/90 என்ற அளவிற்கு மேல் உள்ள இரத்த அழுத்தம் உயர் இரத்த அழுத்தம் என்று கருதப்படுகிறது. அதே நேரத்தில், இரத்த அழுத்தம் 180/120 க்கு மேல் இருந்தால், அது மிக ஆபத்தானதாக கருதப்படுகிறது. அதிக இரத்த அழுத்தம் இருந்தால், சோர்வு, தலைவலி, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் மங்கலான பார்வை போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரத்த அழுத்தத்திற்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களின் ஆபத்து அதிகரிக்கும். இருப்பினும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உணவுமுறை மற்றும் மருத்துவத்தில் மாற்றங்கள் செய்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். கூடுதலாக, சில ஆயுர்வேத மூலிகைகள் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இன்று இந்தக் கட்டுரையில் அதிக ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் சில மூலிகைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.


திரிபலா


திரிபலா உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ள மூலிகையாகும். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. தினமும் இரவில் தூங்கும் முன் ஒரு ஸ்பூன் திரிபலா பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் உயர் ரத்த அழுத்தத்தை (High Blood Pressure) சிறப்பாகக் கட்டுப்படுத்தலாம்.


அர்ஜூன மரப்பட்டை


பல நோய்களுக்கான மருந்து அர்ஜுன மரப் பட்டையில் மறைந்துள்ளது. இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, கொலஸ்ட்ராலையும் குறைக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த அர்ஜுனா மரப்பட்டையிலிருந்து தேநீர் தயாரித்து அருந்தலாம்.


மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை ஓட ஓட விரட்ட.. இந்த காய்களை சாப்பிட்டால் போதும்


அஸ்வகந்தா


அஸ்வகந்தா ஆயுர்வேதத்தில் உடலின் பல பிரச்சனைகளை நீக்க பயன்படுகிறது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் மன அழுத்தத்தை போக்க உதவுகிறது. இதன் நுகர்வு உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். இதற்கு தினமும் ஒரு ஸ்பூன் அஸ்வகந்தா பொடியை வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது பாலுடன் சேர்த்து சாப்பிடலாம்.


ஓமம் இலைகள்


ஓமம் இலைகளில் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. இவை உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. கூடுதலாக, அவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், வெறும் வயிற்றில் ஓமம் இலைகளை உட்கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பல நன்மைகளைப் பெறலாம்.


துளசி


துளசி இலைகள் மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதில் யூஜெனோல் உள்ளது, இது இதயம் மற்றும் தமனிகளின் சுவர்களில் கால்சியம் சேர்வதைத் தடுக்கிறது. இதனால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இதற்கு துளசி இலைகளை மென்று வெறும் வயிற்றில் சாப்பிடலாம் அல்லது அதன் இலைகளில் தேநீர் தயாரித்து அருந்தலாம்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஒரே மாதத்தில் 10 கிலோ எடை குறைக்கலாம்: பக்க விளைவுகள் இல்லாத அட்டகாசமான வீட்டு வைத்தியம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ