நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள்: நீரிழிவு நோய் உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இது குணப்படுத்த முடியாத நோயாக உள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். நீரிழிவு நோய் மரபணு ரீதியான காரணங்களாலும் ஏற்படலாம், அல்லது, நமது மோசமான வாழ்க்கை முறை காரணமாகவும் ஏற்படலாம். இன்றைய காலக்கட்டத்தில், மக்களின் மோசமான உணவுப் பழக்கம் மற்றும் உடல் உழைப்பு இல்லாததால், நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகிலேயே இந்தியாவில்தான் சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ளனர். முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான இளைஞர்கள் டைப் 2 நீரிழிவு நோயின் பிடியில் சிக்குகிறார்கள். இளம் வயதில் நீரிழிவு நோய் வருவதற்கு முன் ஏற்படும் சில அறிகுறிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இவற்றை புறக்கணிப்பது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். 


தாகம் எடுப்பது


அடிக்கடி தாகம் எடுத்தால், எச்சரிக்கையாக இருங்கள். நீரிழிவு நோயாளிகள் அதிக தாகத்தை உணர்கிறார்கள். மீண்டும் மீண்டும் தாகம் ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்பட்டால், உங்கள் இரத்த சர்க்கரை பரிசோதனையை செய்துகொள்வது நல்லதாகும். இருப்பினும், தாகம் எடுப்பது நீரிழிவு நோயின் அறிகுறியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், எதற்கும் பரிசோதனை செய்து கொள்வது நல்லதாகும். 


சோர்வு மற்றும் பலவீனம்


உடலால் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யவோ அல்லது போதுமான அளவில் பயன்படுத்தவோ முடியாவிட்டால், கடுமையான சோர்வு மற்றும் பலவீனத்தை உணரத் தொடங்குகிறது. இளமைப் பருவத்தில் சோர்வாகவும் பலவீனமாகவும் இருப்பது நீரிழிவு நோய் அல்லது வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம்.


காயங்கள் குணமாக அதிக நேரம் எடுப்பது


காயங்கள் குணமடைய அதிக நேரம் எடுத்துக்கொள்வது பொதுவாக நீரிழிவு நோயைக் குறிக்கிறது. உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, ​​நோய் எதிர்ப்பு சக்தி சரியாக வேலை செய்யாது. இதன் காரணமாக காயம் குணமடைய அதிக நேரம் எடுக்கும்.


மேலும் படிக்க | இவை சிறுநீரக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்! ஜாக்கிரதை!


அதிகமான பசி


நீரிழிவு நோயின் மற்றொரு அறிகுறி அதிகப்படியான பசி. இளம் வயதில் அதிக பசி எடுப்பது பொதுவானது. ஆனால் மற்ற அறிகுறிகளுடன் நீங்கள் அதிக பசியையும் உணர்ந்தால், மருத்துவரை சென்று பார்க்க தாமதிக்க வேண்டாம்.


மீண்டும் மீண்டும் தொற்று ஏற்படுவது


மீண்டும் மீண்டும் நோய்த்தொற்று ஏற்படுவது நீரிழிவு நோயின் மற்றொரு ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால், நோய் எதிர்ப்பு அமைப்பு சரியாக செயல்பட முடியாமல், மீண்டும் மீண்டும் நோய்த்தொற்றுகள் ஏற்படலாம். இளமைப் பருவத்தில் உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் அடிக்கடி தொற்று ஏற்பட்டால், உங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | பொதுவாக காணப்படும் புற்றுநோய்கள்: ஆண்களுக்கு எது?, பெண்களுக்கு எது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ