நாள் முழுவதும் வேலை செய்து, இரவில் முழு மற்றும் நிம்மதியான தூக்கம் மிகவும் முக்கியமாகும். சில காரணங்களால் தூக்கம் முழுமையடையவில்லை என்றால், நாள் முழுவதும் நமக்கு சோர்வாக இருக்கும். தூக்கமின்மையால், வேலையில் கூட சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகும். எனவே, போதுமான தூக்கம் மிகவும் முக்கியமானது. சிலருக்கு படுக்கையில் படுத்தவுடன் உறக்கம் வரும். அதே சமயம், சிலர் இரவு முழுவதும் என்ன செய்தாலும் தூக்கமே வராது. பொதுவாக தூக்கமில்லாமல் இருப்பதற்கு அல்லது தூங்க முடியாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இதில் முதல் காரணம் ஹார்மோன் சமநிலையின்மை. எனவே உங்களுக்கும் இந்த பிரச்சனை இருந்தால் இந்த டீயை குடியுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரவில் தூக்கம் தடைப்படுவதற்கான காரணம்
உங்கள் தூக்கம் இரவில் உடைந்தால், மன அழுத்தம் மற்றும் கல்லீரல் நோய் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். இரவில் தூங்கும் போது, ​​கல்லீரல் நச்சுத்தன்மையை நீக்குகிறது. இது தவிர, ஹார்மோன் சமநிலையின்மையும் முக்கிய காரணமாக இருக்கலாம். உடலில் உள்ள ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு காரணமாக, இந்த பிரச்சனை ஏற்படலாம்.


மேலும் படிக்க | வலுவான நரம்புகள் முதல் எடை இழப்பு வரை... பாஸ்மதி அரிசியை ‘இப்படி’ சாப்பிடுங்க..!


தூங்கும் முன் இந்த ஆரோக்கியமான தேநீரை தினமும் அருந்தவும்


தேவையான பொருட்கள்
சுக்கு (உலர்ந்த இஞ்சி தூள்) - 1/4 டீஸ்பூன்
அதிமதுரம் - 1/2 டீஸ்பூன்
இலவங்கப்பட்டை - 1/4 தேக்கரண்டி
அஸ்வகந்தா - 1/4 டீஸ்பூன்


செயல்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றவும்.
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை தண்ணீரில் கலக்கவும்.
தண்ணீர் பாதியாக குறையும் வரை கொதிக்க வைக்கவும்.
தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் இந்த தேநீரை குடிக்கவும்.
தூக்கம் நன்றாக இருக்கும்.


மூலிகை தேநீரின் நன்மைகள்
இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது. இதில் ஜிஞ்சரால் உள்ளது, இது தூக்க ஹார்மோனை வெளியிட உதவுகிறது.
அதிமதுரம் மனதை அமைதிப்படுத்துகிறது மற்றும் மெலடோனின் ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது.
இலவங்கப்பட்டை தூக்க சுழற்சியை சரிசெய்ய உதவுகிறது.
அஸ்வகந்தா பதட்டத்தைத் தணித்து உடலைத் தளர்த்தும். இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.


​தூக்கமின்மைக்கான காரணங்கள்
* மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளால் உங்கள் மூளை இரவில் சுறு சுறுப்பாக இருக்கும். இதனால் தூங்குவது கடினமாகிவிடும்.


* இரத்த அழுத்த மருந்துகள் போன்ற சில மருந்துகள் தூக்கத்தை சீர்க்குலைக்கின்றன. எனவே இந்த மருந்துகளை தொடர்ந்து எடுத்துக் கொள்பவர்களுக்கு தூக்கமின்மை ஏற்படலாம்.


* கவலை அல்லது மனசோர்வு அதிகமாக உள்ளவர்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.


* படுக்கைக்கு செல்வதற்கு முன்பு இரவு உணவாக சீக்கிரம் செறிமானம் ஆகாத உணவை நீங்கள் சாப்பிட்டால் அதனால் உங்கள் உறக்கத்தில் சிக்கல் ஏற்படும்.


* படுக்கைக்கு செல்வதற்கு முன் கணினி, ஸ்மார்ட்போன்கள் போன்ற சாதனங்களை பயன்படுத்துவது உங்களது தூக்க சுழற்சியை சீர்க்குழைக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க |  காலி வயிற்றில் பழம் ஜூஸ் குடிப்பீங்களா... இந்த செய்தி உங்களுக்கு தான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ