நீரிழிவு சிகிச்சை: நீரிழிவு நோய் என்பது வாழ்க்கை முறை தொடர்பான நோயாகும். மனிதனின் உணவு முறை சரியாக இல்லாமல் இருப்பது, உடல் செயல்பாடு இல்லாதது போன்ற காரணிகள் நீரிழிவு நோய்க்கு காரணமாகின்றன. சர்க்கரை நோய் வந்தால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டிய நிலை ஏற்படலாம். சர்க்கரை நோயாளியின் குளுக்கோஸ் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அத்தகைய சூழ்நிலையில், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியமாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக அளவில் நீரிழிவு நோயின் தலைநகரம் என்று இந்தியா அழைக்கப்படுகிறது. இதற்குக் காரணம், உலக அளவில் 7.7 கோடிக்கும் அதிகமானோர் இந்தியாவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, முதலில் தினசரி வாழ்க்கை முறையை மேம்படுத்த வேண்டும். இதனால் தினமும் குறைந்து அதிகரிக்கும் சர்க்கரை அளவு கட்டுப்படும்.


நீரிழிவு நோய் இன்றைய காலகட்டத்தில் பலரிடம் காணப்படும் ஒரு பொதுவான நோயாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். நீரிழிவு நோய்க்கு மருந்து எதுவும் இல்லை, வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளில் மாற்றங்களைச் செய்து அதை பெரிய அளவில் கட்டுப்படுத்தலாம். நீரிழிவு நோய் இருந்தால், நீங்கள் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் உண்ணும் அதிக கார்போஹைட்ரேட் உங்கள் இரத்த சர்க்கரையை எவ்வாறு பாதிக்கும் என்பதை அறிந்து கொள்வது அவசியம். அமெரிக்க நீரிழிவு சங்கம் (ADA) ஜீரோ கலோரி அல்லது குறைக்கப்பட்ட கலோரி பானங்களை குடிக்க பரிந்துரைக்கிறது.


மேலும் படிக்க | வெறும் வயிற்றில் பூண்டையும், தேனையும் சேர்ந்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் இவை!


சர்க்கரை அளவு அடிக்கடி குறைந்து அதிகரிக்க காரணம் என்ன? 


சர்க்கரையின் அதிகரிப்பு நோயாளியின் உணவைப் பொறுத்தது. அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவை சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரையை மிக வேகமாக அதிகரிக்கிறது. உணவு உண்பதில் தாமதம் ஏற்பட்டால், சர்க்கரை அளவு குறையும். ஆகையால், சர்க்கரையின் அளவைப் பராமரிக்க சரியான நேரத்தில் உணவை உண்ண வேண்டியது மிக அவசியமாகும். 


உடல் செயல்பாடு முக்கியம் 


உடற்பயிற்சி, யோகா, நடைபயிற்சி, ஓடுதல் அல்லது இதுபோன்ற எந்த வேலை செய்தாலும் அது குளுக்கோஸ் அளவை பாதிக்கிறது. இதன் காரணமாக, சர்க்கரையின் அளவில் உடனடி அதிகரிப்போ குறைவோ இல்லாமல் கட்டுப்பாட்டில் இருக்கும். உடல் உழைப்பு இல்லாமலும், அதிக உணவு உட்கொள்ளலும் இருந்தால், சர்க்கரை அளவு மிக வேகமாக அதிகரிக்கும்.


சரியான நேரத்தில் மருந்து எடுத்துக் கொள்ளுங்கள்


சர்க்கரை நோயாளிகள் தினமும் தங்களுக்கான மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் சரியான நேரத்தில் மருந்தை உட்கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம், இரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் குறைக்கப்படுகின்றன. நோயாளியும் நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பார். 


தேவையற்ற மனஅழுத்தம் வேண்டாம்


தேவையற்ற மன அழுத்தத்தை எடுத்துக் கொண்டால், உடல் தேவையற்ற ஹார்மோன்களை வெளியிடுகிறது. இதன் காரணமாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே நாள் முழுவதும் மன அழுத்தம் இல்லாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.


நல்ல தூக்கம் தேவை


ஒரு ஆரோக்கியமான நபர் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். தூக்கமின்மையால் கிளைசெமிக் அளவு அதிகரிக்கிறது. சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு கிளைசெமிக் அளவைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கால்களில் இந்த அறிகுறிகள் இருக்கா? ஜாக்கிரதை... நீரிழிவு நோயாக இருக்கலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ