சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவிலும் பரவத் தொடங்கியது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு,  தடுப்பூசி தயாரிக்கும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தடுப்பு மருந்து பரிசோதனைக்கு பின், சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த ‘கோவிஷீல்டு’(Covishield), பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த ‘கோவேக்ஸின்’(Covaxin) ஆகிய தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.


இதை அடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணியை கடந்த 16ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) துவக்கி வைத்தார். முதல் கட்டமாக சுமார் 3 கோடி சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் பணி மார்ச் மாதம் தொடங்க உள்ளது.  நோய் எதிர்ப்பு திறன் குறைந்தவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், வேறு நோய் வகையான நோய் உள்ளவர்கள் என சுமார் 27 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. 


பிரதமர் மோடி அவர்களுக்கு 70 வயது என்பதால், இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் திட்டத்தில் அவருக்கு தடுப்பூசி வழங்கக் கூடும் என அரசு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதே போல், 50 வயதிற்கு மேற்பட்ட முதல்வர்களுக்கு தடுப்பூசி போடப்படலாம் என கூறப்படுகிறது.


 முன்னதாக, தடுப்பூசி போடும் பணி தொடர்பாக ஜன., 11-ல் முதல்வர்களுடன் பிரதமர் நடத்திய கூட்டத்தில்,  அரசியல்வாதிகள் தங்களது முறை வரும் போது மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும், வரிசையில் முந்த முயற்சிக்கக் கூடாது என்றும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | COVAXIN கடுமையான பக்க விளைவை ஏற்படுத்தினால் இழப்பீடு வழங்கப்படும்: Bharat BioTech


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR