நீ பெரிய புடலங்காயா? என விளையாட்டுதனமாக ஊர் பக்கங்களில் பேசுவார்கள். முதல்முறையாக அந்த கேள்வியை எதிர்கொள்பவர்களுக்கு, இதற்கு என்ன அர்த்தம்? என்ற யோசித்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஊர் பக்கங்களில் இருக்கும் இரட்டை அர்த்தம் என்ன? என்று தெரிந்துகொள்ள தேவையில்லை என்றாலும், புடலங்காய்-க்கு இருக்கும் மருத்துவ குணங்களை எல்லோரும் தெரிந்து கொள்வது அவசியம். வீட்டு சமையலில் புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொரியல், புடலங்காய் குழம்பு என்று விதவிதமாக சாப்பிட்டிருப்பவர்கள் கூட, அதனுடைய மகத்துவத்தை தெரிந்துவைத்திருக்கும் வாய்ப்புகள் குறைவு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், இங்கே புடலங்காயின் மருத்துவ குணங்களை விலாவரியாக தெரிந்து கொள்வோம். இந்த காயை எப்போதும் ஓரளவுக்கு நடுத்தரமான காயை வாங்கி சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். முழுவதுமாக முற்றிய காயை சமையலுக்கு பயன்படுத்தினால் சுவை நன்றாக இருக்காது. சாப்பிடவும் முடியாது. மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும் இந்த காய், ஆண்களுக்கு அவசியமான ஒன்று. முன்னோர்கள் கூற்றுப்படி, இந்த காய் ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டதாம். 


மேலும் படிக்க | சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள்... இவற்றை தொடவே கூடாது!! ஜாக்கிரதை!!


விந்துவை கெட்டியாக்கும்


ஆண்மை விருத்தி செய்யும் புடலங்காயை உணவில் சேர்த்துக் கொண்டால், விந்துவை கெட்டி படுத்தும். ஆண்மை கோளாறுகளை போக்கும். மேலும், காமத் தன்மையை பெருகும் வல்லமையும் புடலங்காய்க்கு உண்டு


உடல் எடைகூட


இப்போது உடல் மெலிந்து இருப்பவர்கள் உடல் எடையைக் கூட்ட மருந்துகளையும், பவுடர்களையும் உபயோகம் செய்து கொண்டிருக்கிறார்கள். இது தேக ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. உணவு முறையில் மாற்றம் கொண்டு வந்து ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு உடல் எடையை கூட்ட வேண்டும். அந்தவகையில் புடலங்காயை உணவில் சேர்ந்தால் உடல் பருமன் கூடும். 


செரிமானத்தை சீராக்கும்


அஜீரண கோளாறுகளை எளிதில் சீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். குடல் புன்னை ஆற்றும் .வைத்து புண் , தொண்டை புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேற்கொண்ட நோயின் பாதிப்பு பெருமளவு குறையும். இதில் நார் சத்து அதிகம் இருப்பதால் மலசிக்கலை போக்கும் தன்மை உடையாதாக இருக்கிறது. மூல நோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் நல்ல மருந்தாக இருக்கிறது.


நரம்புகளுக்கு புத்துணர்ச்சி


நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து நியாபக சக்தியே அதிகரிகிறது. பெண்களுக்கு உண்டாக்கும் வெள்ளை படுதலை குணபடுத்தும். கருப்பைக் கோளாறையும் குணபடுத்தும். கண் பார்வையை அதிகரிக்க செய்யும் ஆற்றல் புடலங்காயில் உண்டு. இதில் அதிகம் நீர்சத்து இருபதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை சிறுநீர் மூலம் வெளியேற்றும். வாத, பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களை போக்கும்.


மேலும் படிக்க | வெங்காய டீ குடித்திருக்கிறீர்களா? செய்முறை மற்றும் பலன்கள் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ