வெயிலின் ஆதிக்கம் தற்போது அதிகரித்து வரும் நிலையில் இன்று இரண்டாவது நாளாக ஹைதராப்பாத்தில் மழை பொழிந்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் வட மாநிலங்களை மட்டும் அல்லாம் தெற்கு மாநிலங்களையும் குளிர் கொடுமைப்படுத்தி வந்த நிலையில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வருகிறது. கடந்த வார வானிலை அறிக்கையின் படி இதுவரை இல்லாத அளவிற்கு (பிப்., மார்ச் மாதங்களில்) வெயில் முன்னரே வந்த வாட்டி வருகிறது.


இந்நிலையில் இன்று கேடை பரிசாக தென் இந்தியாவில் மழை தலை காட்டியுள்ளது. அதிலும் ஆலங்கட்டி மழையாக மக்களை மகிழ்வித்துள்ளது.


இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட தெலுங்கானவில் மதியத்திற்கு மேல் மழை பொழிய துவங்கியது. இதைத் தொடர்ந்து பலத்த காற்று வீசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.