சென்னையில் நகை கடை, ஜவுளி கடைகள் உள்ளிட்ட 23 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரி ஏய்ப்பு மற்றும் ஜவுளி மொத்த வியாபாரத்தில் ஈட்டிய பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக வந்த புகாரின் அடிப்படையில், காந்தி பிரதர்ஸ் குரூப் நிறுவனத்துக்கு சொந்தமான கடைகள் மற்றும் உரிமையாளரின் இல்லங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 


இன்று காலை முதல் இந்த சோதனையை தொடங்கிய வருமான வரித்துறை தி.நகர், சவுகார் பேட்டை உள்ளிட்ட இடங்களிலிலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.


இதையடுத்து, பல்லாவரத்தில் உள்ள  கவுதம் மற்றும் அவரது உறவினர்கள் வீடு மற்றும் 3 நகை கடைகளில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை வேப்பேரியில் டாக்டர் பிரகாஷ் சந்த் ஜெயின் என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.