மத்திய பிரதேச மாநிலம் சிந்தவார் பகுதியில் தொடர்ந்து சிறத்தைபுலிகள் அப்பகுதி மக்களை பலி வாங்கி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தொடர்பலியில் நான்காவதாக, 10 வயது சிறுமி ஒருவர் பலியாகியுள்ளார். கடந்த 31 நாட்களில் நிகழும் 4 வது பலி இதுவாகும்.


தமாய் வனப்பகுதியில் சுற்றித்திரியும் இந்த சிறுத்தைப்புலி, பாதிக்கப்பட்ட சிறுமியை குல்சான் கிராம பகுதியில் அவர் விளையாடிக்கொண்டிருந்த போது அவரை கொன்டுச் சென்றுள்ளது.


மூன்று நாட்களாக இவர் சிறுத்தையின் பிடியில் உயிருக்கு போராடி வந்த நிலையில் தற்போது பாதி உடல் உண்ணப்பட்ட நிலையில் பாதி உடல் மட்டமே மீட்கப்பட்டுள்ளது.


முன்னதாக கல்பணா(5), ஹார்ஷ்(10) மற்றும் ஷாவன்(12) ஆகியோர் இந்த சிறுத்தையின் பிடியில் சிக்கி உயிர் விட்டவர்கள் ஆவர்.


இந்த சிறுத்தைபுலியினை பிடிக்க வனப்பகுதியை சுற்றிலும் சுமார் 50 கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்கானிக்கப்பட்டு வருகிறுத!