கடந்த ஏப்ரல் மாதம் மத்திய பிரதேச மாநிலம் ரேவாவில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். 9 வயது சிறுமியின் சகோதரர் (13 வயது) தான், மொபைலில் ஆபாச வீடியோவை பார்த்துவிட்டு அவரது சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். மேலும் இதனை மறைக்க அவரது தாய் மற்றும் 7 மற்றும் 18 வயதுடைய 2 சகோதரிகள் உதவியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்த நபர்! வெளியான பரபரப்பு வீடியோ!


கொலை தொடர்பாக அந்த பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ச்சியான விசாரணை மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். "ஏப்ரல் 24 அன்று ஜாவா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து போலீஸார் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இறந்த சிறுமியின் உடல் அவரது வீட்டின் முற்றத்தில் இருந்து மீட்கப்பட்டது" என்று காவல்துறை கண்காணிப்பாளர் விவேக் சிங் தெரிவித்துள்ளார். 


குடும்ப உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், சம்பவம் நடந்த அன்று கற்பழித்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் அருகில் அவரது 13 வயது சகோதரர் இரவில் அவருக்கு அருகில் படுத்து தூங்கியுள்ளார். அவர் தனது செல்போனில் ஆபாச வீடியோக்களை பார்த்துள்ளார், பிறகு தனது சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன் பிறகு அந்த சிறுமி இது குறித்து தந்தையிடம் சொல்லுவேன் என்று கூறியுள்ளார். இதனால் பயத்தில் தனது தங்கையை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் தனது தாயை எழுப்பி நடந்த விஷயத்தை தெரிவித்துள்ளார். அவரது தாய் சோதனை செய்யபோது இன்னும் சிறுமி உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் மீண்டும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். 


இதன் பிறகு, அவரது இரண்டு மூத்த சகோதரிகளும் இதனை தெரிந்து கொண்டு தனது தம்பியை காப்பாற்ற தாங்கள் இரவில் படுத்து இருந்த இடத்தை மாற்றி அமைத்துள்ளனர். இருப்பினும், பலமுறை நடத்தப்பட்ட விசாரணையில் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். குற்றத்தை ஒப்புக்கொண்ட 13 வயது சிறுவன் உட்பட, அவனது இரண்டு சகோதரிகள் மற்றும் அவர்களது தாயார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். "வீட்டின் முற்றத்தில் சிறுமியின் சடலம் கிடைத்தது. மருத்துவ சோதனையில் அவர் கற்பழித்து, கொலை செய்யப்பட்டது உறுதியானது. ஆனால் குடும்ப உறுப்பினர்கள் விஷ பூச்சி கடித்து இறந்துள்ளார் என்று நாடகம் ஆடினர். பிறகு விசாரணையில் உண்மை வெளிவந்துள்ளது" என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | நிதி ஆயோக் கூட்டம்: 7 மாநில முதல்வர்களைத் தொடர்ந்து மம்தாவும் புறக்கணிப்பு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ