கடந்த மே 20ம் தேதி ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காஜிகுடம் கிராமத்தில் 14 வயது சிறுமி 6 நபர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறுமியின் அப்பா, அம்மா இருவரும் அன்றாட கூலி வேலைக்கு செல்வதால் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். முப்பது வயது உடைய ரவி என்பவர் மற்றும் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். தனியாக இருந்த சிறுமியை 6 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.


சிறுமி தனது பெற்றோரிடம் இச்சம்பவத்தை பற்றி கூற பயந்து மறைத்து வந்துள்ளார். சிறுமி உடல் ரீதியாக அவதிப்பட்டு வந்ததையடுத்து, பெற்றோருக்கு இச்சம்பவம் பற்றி தெரியவந்தது. 


சிறுமியை அழைத்துக் கொண்டு போலீசில் புகார் செய்து உள்ளனர்.  இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் 6 பேரையும் தேடி வருகின்றனர். இவர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளன.
சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு உள்ளார்.