19 வயது பெண்ணிடம் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஜூலை 7ஆம் தேதி தனது நண்பரின் வீட்டிலிருந்து, பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு அந்த பெண் திரும்பி வரும் வழியில், நான்கு பேர் அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் கூறுகையில்; இந்த சம்பவம் குறித்து பல வாரங்களாக அவர் யாருக்கும் தெரிவிக்காமல் தானாக அழுது கொண்டே இருந்துள்ளார். 


இதையடுத்து, அவரின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, அவர் அவுரங்காபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்தே அந்த பெண் தனது குடும்பத்தினரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். 


இது குறித்து காவல் ஆய்வாளர் தீபக் விஜய் கூறும்போது, 376 (பலாத்காரம்), 376D (கூட்டு பாலியல் பலாத்காரம்) 34 (கிரிமினல் குற்றம்) உள்ளிட்ட தண்டனை பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத அந்த நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். தொடர்ந்து, இது குறித்து விசாரணையும் நடந்த வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.