ஜம்மு: காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சுமார் 2 முதல் 3 வீரர்கள் கொல்லப்பட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் கடந்த மாதம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பின்பு காஷ்மீர் மாநில எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.  


நேற்று காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் நவ்ஷேரா பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டி இந்திய ராணுவ நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. காலை 10 மணிக்கு அளவில் தொடங்கிய இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் பாகிஸ்தான் தரப்பில் 2 முதல் 3 வீரர்கள் பலியாகி இருப்பதாக ராணுவ அதிகாரி கூறியுள்ளார்.


ஜம்மு மாவட்டத்தின் ஆர்.எஸ்.புரா செக் டார் பகுதியில் சர்வதேச எல்லையையொட்டி சுசேத்கார் என்னும் இடத்தில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று மாலை தாக்குதல் நடத்தியது. இதில் பல குண்டுகள் அப்பகுதியில் இருந்த வீட்டின் மீது விழுந்தது. அந்த வீட்டில் இருந்த ஒரு சிறுமி உள்பட 6 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.