குஜராத் மாநிலம் அனந்த் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் இருவர் பரிதாபமாக பலியாகினர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனந்த பகுதிக்கு அருகாமையில் உள்ள தாரப்பூர் கிராமத்தில் இந்த விபத்து நடைப்பெற்றுள்ளது. இரண்டு லாரிகளுக்கு மத்தியில் கார் ஒன்று சிக்கியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த விபத்தில் 2 பேர் சம்பவயிடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர், மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், அருகாமையில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.



இச்சம்பவமானது திட்டமிடப்பட்டு செய்யப்பட்டதா, இல்லை உன்மையில் விபத்தாக நிகழ்ந்ததா என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.