ஜம்மு-வில் திடீர்ரென பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளார். மேலும், 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு-காஷ்மீரில் உள்ள டாடாவில் தாத்ரி காந்தோ சாலையில் இன்று காலை பேருந்து ஒன்று மலையில் இருந்து கவிழ்ந்ததில் 2 பேர் ,சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


பேருந்து அதிவேகத்தில் விரைந்து வந்து மலையில் இருந்து கவிழ்ந்ததில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.