டெல்லியில் திருமண ஊர்வலத்தின் பொது மணமகனை அடையாளம் தெரியாத நபர் இருவர் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு.... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: தெற்கு டெல்லி மடங்கிற் பகுதியில் திங்கள் கிழமை (நேற்று) இரவு 25 வயதான ஒருவரின் திருமண ஊர்வலம் நடை பெற்றுள்ளது. அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் மணமகனை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். 


இந்த சம்பவமானது, நேற்று மாலை நடந்துள்ளது. இவருக்கு நேற்று இரவு சுமார் 10 மணியளவில் பாதல் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்துள்ளது. இதையடுத்து, துப்பாக்கி குண்டானது மணமகனின் தோள்பட்டையில் பாய்ந்தது. இதை தொடர்ந்து மணமகனை உறவினர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர்.


இந்த சம்பவம் குறித்து, மணமகனின் உறவினர்கள் அப்பகுத் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தாக்குதல் நடந்ததற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.