புதுடெல்லி: மற்றொரு கொடூரமான சம்பவத்தில் தேசிய தலைநகரத்துக்கு அவமானம் நிழந்து உள்ளது. டெல்லி, பாண்டவ் நகர் பகுதியில் 26 வயது பெண்ணை ஐந்து ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தன்னை கற்பழித்த கயவர்களிடமிருந்து 20 அடி உயர பால்கனியிலிருந்து பெண் ஒருவர் குதித்து தப்பி சென்றார். கிழிந்த ஆடையுடன் சாலையில் நடந்து சென்ற அப்பெண்ணுக்கு பொது மக்கள் உதவாமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லியின் தெற்கு பகுதியில் பெண் ஒருவர் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கு பழக்கமான விகாஸ் என்பவர், கடந்த சனிக்கிழமை சந்தித்தார். அப்போது, விகாஸ் அந்த பெண்ணை தனது பிளாட்டிற்கு அழைத்து சென்றார். வழியில் மேலும் இரண்டு பேர் சேர்ந்து கொண்டனர். பெண் உட்பட, 4 பேரும் வீட்டிற்கு சென்ற போது, அங்கு ஏற்கனவே 2 பேர் இருந்துள்ளனர். 5 ஆண்களும் ஒன்று சேர்ந்து வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை மது குடிக்க வைத்தனர். 


இதில் மயக்கமடைந்த அந்த பெண்ணை, 5 பேர், காலை வரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மயக்கம் தெளிந்த அந்த பெண், அவர்களிடமிருந்து தப்பிக்க 20 அடி உயரமுள்ள பால்கனியிலிருந்து குதித்தார். அங்கிருந்து கிழிந்த ஆடையுடன் தெருவில் நடந்து சென்றார். இதனை பார்த்த பொது மக்கள் யாரும், அந்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை. ஒருவர் மட்டும் இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். 


இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கால்சென்டரில் வேலைபார்க்கும், விகாஸ், லக்சய் பல்லா, நவீன், ஸ்வரீட், பரதீக் ஆகியோரை கைது செய்தனர்.


பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.