இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் இந்திய இராணுவ தளபதியாக ஆங்கில அதிகாரிகள் இருந்தனர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியத் தரைப்படையின் முதல் படைத்தலைவராக (commander-in-chief) லெப்டினன்ட் ஜெனரல் கே எம் கரியப்பா 1949-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி பதவியேற்றார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் பதவியேற்ற ஜனவரி 15-ம் தேதி இந்திய இராணுவ தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இராணுவ வீரர்கள் மற்றும் போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில், இராணுவ தினத்திற்கு ஒத்திகை பார்க்கும் போது த்ருவ் வானூர்தியில் இருந்து கயிறு அறுந்து மூன்று இராணுவ வீரர்கள் கீழே விழுந்துள்ளனர். அப்பொழுது மூன்று இராணுவ வீரர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மீட்கபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மூன்று வீரர்களும் நன்றாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.