உத்தரப்பிரதேசத்தில், கட்டுமானப் பணி நடைபெற்று வந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப்பிரதேசம் பஸ்டி பகுதியில், மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கட்டுமான பணி நடைபெற்று வரும் மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் சிக்கி நான்கு பேர் காயமடைந்துள்ளனர். 


இதையடுத்து, சம்பவ இடத்திற்கு மீட்புப்பணியினர் விரைந்து வந்துள்ளனர். இடிபாட்டில் சிக்கி காயமடைந்தவர்களை சிகிச்சைகாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 



இதற்க்கு முன்னதாக, இது போன்ற ஒரு சம்பவம் கடந்த மே மாதம் 15 ம் தேதி நடந்தது. அதில், 18 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது!